Archive for புரட்டாதி, 2006

புத்தகச்சந்தை

கொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன வருசம் 3 மில்லியன் புத்தகம் வித்ததாயும் இந்த வருசம் கொஞ்சம் கூடும் எண்டும் அடிக்கடி அறிவிச்சுக் கொண்டு இருந்தார்கள். உண்மையோ போய்யோ தெரியேல்லை எண்டாலும் தினமும் மண்டபம் நிறைஞ்ச காட்சிகள் தான். அனேகமா எல்லாரும் ஒரு புத்தகம் எண்டாலும் கொண்டு போனவை தான்.

2004 இல சடகோபன் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு ஒண்டும் வாங்கினான் முந்தியே நூல்நிலையத்திலை கண்டது இப்பதான் வாங்கக் கிடைச்சுது. நல்லா இருந்துது. சிவத்தம்பி ஐயாவோட முன்னுரையோட ஒரு சின்னத் துண்டு உதாரணத்துக்கு.

நண்பா..
வடலிப்பனையும்
கடலைப்பொடியும்
பொலிந்த தேசமதில்….
விடியல் வெள்ளி பிடிக்கவென்று
விடலைப்பெடியன் படலை தாண்டிய காலமிது.

புத்தக விபரம்
மண்ணில் தொலைந்த மனதைத் தேடி……..
கவிதைத் தொகுப்பு
தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு.

நல்லா இருந்தா காசு குடுத்து வாங்கி வாசியுங்கோ (வழமைபோல).
————————————————-
நேற்று ஒரு பகடி வாச்சனான் அதையும் சொல்லுறன். உண்மையோ தெரியேல்ல
All the women has seven ages : Baby , Child, Girl, Young woman, Young woman, Young woman, Young woman.

28 புரட்டாதி, 2006

என்ன அலட்டலாம்…….

இந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே “மக்றோமீடியா பிளாஸ்” பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் “வியூச்சர் பிளான்” எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் ஒரே இடத்தில கொட்டுவம். இருந்தாலும் யாழப்பாணம் போனாத்தான் கணனியில கிடக்கிற புகைப்படங்களை எடுக்கலாம். அதுவரைக்கும் நெஞ்சில் நின்றவை எண்டு ஏதாவது அலட்டுவம் எண்டு நினைக்கிறன்

27 புரட்டாதி, 2006

பெயர் வைத்த கதை ???

இது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன்.

இப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ தெரியேல்ல

பசி

அவனுக்கு உடம்பில்
அவளுக்கு வயிற்றில்
பரிமாறிக்கொண்டார்கள்.

27 புரட்டாதி, 2006