யாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.
வரதர்
ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது …
லேற்றஸ்ற் கைப்பேசி
நேற்று ஹர்த்தால். ஒண்டும் செய்யேலாம போயிற்றுது. உங்களுக்காக இந்த லேற்றஸ்ற் கைப்பேசின்ர படத்தை தந்திருக்கிறன். பாருங்கோவன்
யாழ்ப்பாணத்து பெருமாள்
யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.
ஆத்மாநாம் படைப்புகள்
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.
ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் …

பின்னூட்டங்கள்