Archives for: November 2006
இன்றைய சிந்தனை – கருவி. 0 comments

இன்றைய சிந்தனை எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியானது உங்கள் கருவிப்பட்டைக்கு அழகு சேர்ப்பதுடன் ஒரு சிந்தனையையும் உங்கள் வாசகருக்கு ஊட்டக் கூடியது. தினமும் புதிய புதிய சிந்தனைகள் காட்டப்படக்கூடியவாறு இது அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறான கருத்தோ அல்லது விளம்பர வாசகங்களோ இதனூடாக காட்டப்படமாட்டாது ( எதுக்கும் இருக்கட்டும் எண்ட இந்த வசனத்தையும் சேத்தனான்). முதலாவதாக Prayers and Meditations for Mankind என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அனேக மதங்களில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நூல் Peter L. Higgs மற்றும் Kathleen R. Higgs ஆகியோரால் தொகுக்கப்பெற்று 1978ம் ஆண்டு மத்திய ஆபிரிக்காவின் சாம்பியா நாட்டின் தலைநகர் லுசாக்காவில் வெளிவந்தது.

நிரலிக்கு (சொடுக்கும் போது நிரலியை பெறமுடியாவிட்டால் right click பண்ணி save target as இனை தெரிவு செய்யுங்கள்)

Read More..
உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி 25 comments

உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு அழகிய நாட்காட்டியை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான். இந்நாட்காட்டியில் தினமும் ஒவ்வொரு அழகிய படம் அழகு செய்யும்.

நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.

Read More..
வரதர் ஐயாவின் புதிய முயற்சி 20 comments

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.

அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

Read More..
இன்னுமொரு மணிக்கூடு 10 comments

உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.

நிரலிக்கு

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

Read More..
பறாளை விநாயகர் பள்ளு 16 comments

சுந்தரிக்காக வென்று இப்பதிவு

பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் செயத நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளை என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக்கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாயும் இளையபள்ளி சோழமண்டலப்பள்ளியாயும் காட்சியளிக்கிறார்கள்.

இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக ‘கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது. அதன் பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றது. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல், மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்த பள்ளி இரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.

சுத்தர்பணிந் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும்
அத்த பரஞ்சோதி அண்ணலே – தைத்தலத்துச்
சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்
காலன் வரும்போது கா

Read More..
Next Page »