Archive for கார்த்திகை, 2006

இன்னுமொரு மணிக்கூடு

உங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.

[html]<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0" width="175" height="70" id="clock_d" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="movie" value="http://www.aslibrary.org/oorodi/clock_d.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />
<embed src="http://www.aslibrary.org/oorodi/clock_d.swf" quality="high" bgcolor="#ffffff" width="175" height="70" name="clock_d" align="middle" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
</object>[/html]

பயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

29 கார்த்திகை, 2006

பறாளை விநாயகர் பள்ளு

சுந்தரிக்காக வென்று இப்பதிவு

பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் செயத நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளை என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக்கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாயும் இளையபள்ளி சோழமண்டலப்பள்ளியாயும் காட்சியளிக்கிறார்கள்.

இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக ‘கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது. அதன் பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றது. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல், மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்த பள்ளி இரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.

சுத்தர்பணிந் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும்
அத்த பரஞ்சோதி அண்ணலே – தைத்தலத்துச்
சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்
காலன் வரும்போது கா

29 கார்த்திகை, 2006

இரண்டு படங்கள்

இந்த இரண்டு படங்களும் நிழற்பட ஓவிய வகையைச் சார்ந்தவை. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

28 கார்த்திகை, 2006