Archive for கார்த்திகை, 2006

ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

சரசோதி மாலை – சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை – சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி – சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி – சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.

இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)

24 கார்த்திகை, 2006

கைப்பேசிகளால் புகைப்படம் எடுத்தல்

ஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.

நீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.

குறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.

குறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.

நீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.

நீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.

வெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.

நீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க…

23 கார்த்திகை, 2006

வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

22 கார்த்திகை, 2006