Archives for: April 2008
வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை 9 comments

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.

நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். இத்தகவல்களே config.php என்கின்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.

இங்கு வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே உருவாக்காமல் எம்மை உருவாக்கி தருமாறு கேட்பதனால் நாமே அதனை உருவாக்க வேண்டி இருக்கின்றது. இங்குதான் முக்கியமான பிரச்சனை நேர்கிறது. அனேகமான வழங்கி வழங்குனர்கள் தரவுத்தள மேலாண்மைக்கு phpMyAdmin போன்ற சிறந்த மென்பொருள்களை வழங்கினாலும் தரவுத்தள உருவாக்கத்திற்கு அவ்வசதிகளை வழங்குவதில்லை.


இதனால் எம்மால் config.php இல் கீழே காட்டப்படுகின்ற MySQL charset, MySQL connection collation ஆகிய இரண்டு கட்டளைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடிவதில்லை. இவை இரண்டும் தன்னிச்சையாகவே latin1_swedish_ci ஒருங்கு குறியில் அமைக்கப்பெற்று விடுகின்றன. சிறந்தொரு தரவுத்தள உருவாக்க மென்பொருள் இருக்குமிடத்து எம்மால் இவற்றை நிச்சயமாக கீழே காட்டப்பட்டது போல கவனத்தில் எடுக்க முடியும்.

நிறுவல் முடிந்த பின்னர் தரவுத்தளம் latin1_swedish_ci ஒருங்கு குறியிலும் வேர்ட்பிரஸின் config.php பொதுவாக கீழ்வருமாறும் அமைந்திருக்கும்.

இதனை மிக இலகுவாக கீழ்வருமாறு ஒரு வரைபடத்தில் காட்டலாம்.

இந்த வரைபடத்தை பார்க்கும்போதே என்ன பிரச்சனை நேர்கிறது என்பது உங்களுக்கு இலகுவாக விளங்கிவிடும். (இதற்கு கீழ்வரும் பிரச்சனையை மிக இலகுவாக விளக்க முயற்சிக்கின்றேன்) இப்பொழுது நீங்கள் உள்ளிடுகின்ற தமிழ் எழுத்துக்கள் தரவுத்தளத்திற்கு செல்கின்றன. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளும் ஒருங்குகுறி என்னவென்பது குறிப்பிடப்படாததால் தரவுத்தளத்தில் அவ்வாறே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் வேரட்பிரஸை சிறிது மேம்படுத்துகிறீர்கள் (2.2—2.2.1). இப்பொழுது ஆரம்பிக்கிறது பிரச்சனை. இந்தப்பிரச்சனை உங்கள் எழுத்துக்கள் பூச்சிகளாக தரவுத்தளத்தில் மாறாது ஆனால் உங்கள் வெளியீடு பூச்சிகளாக தெரிகிறது. இதற்கு தீர்வுதான் ரவிசங்கர் குறிப்பிட்ட முறை.

தரவுத்தளத்தின் ஒருங்குகுறி தொடர்பான தகவல்களை config.php இல் நீக்கிவிடல்.

சரி அப்படியானால் எனக்கு என்ன பிரச்சனை வந்தது.

வேர்ட்பிரஸ் 2.5 இன் தரவுத்தளக்கட்டமைப்பு வேர்ட்பிரஸ் 2.2 இனை விட மிகவும் வேறுபட்டது. இதன்போது தரவுத்தளம் மாற்றமடைகிறது. பிறகென்ன அவ்வளவுதான் உங்கள் தகவல்கள் அனைத்தும் தரவுத்தளத்துக்குள் பூச்சிகளாக மாறிவிடும். நீங்கள் config.php ஐ என்னதான் மாற்றியும் பயனில்லை.

செய்யப்படுகின்ற Backup கள் கூட ஒருங்குகுறி மாற்றத்தால் பயனற்று போய்விடும். நீங்கள் backup.sql ஐ திறந்து பார்த்தால் எழுத்தக்கள் பூச்சிகளாக இருப்பதை பார்க்கலாம்.

இதனை இலகுவாக சொல்வதானால் யுனிகோட் ஒருங்குகுறியில் ஒரு text கோப்பை உருவாக்கி சேமிக்கும் போது ANSI ஒருங்குகுறியில் சேமித்து விட்டு, பின்னர் மீண்டும் தமிழை தேடுவது போன்றது. இந்த அனுபவம் உங்களுக்கு இல்லையாயின், ஒருமுறை செய்து பாருங்கள்.

வேறென்ன?? கேள்வி இருந்தா கேளுங்க. தெரிஞ்சா பதில் சொல்லுறன். தெரியாட்டி ரவிசங்கர் வந்து சொல்லுவார்…

Read More..
சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது?? 12 comments

நீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.

இது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.

நான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது வில்லங்கம்.

வேர்ட்பிரஸை நிறுவிய காலத்தில் இருந்து அது தமிழிற்கு ஒவ்வாத ஒரு ஒருங்குகுறியில் இருந்து வந்துள்ளது. நான் தரவுத்தளத்தை மேம்படுத்திய போது அனைத்து தரவுகளும் பூச்சிகள் பூச்சிகளாக மாறிவிட்டன.


Photobucket - Video and Image Hosting

எனவே நீங்கள் இதுவரைக்கும் உங்கள் தரவுத்தளத்தை பற்றி கவனிக்காமல் விட்டிருந்தால் அதனை கவனித்து கீழே காட்டப்பட்டுள்ளது போன்று யுனிகோட் ஒருங்குகுறிக்கு மாற்றி விடுங்கள். மாற்றாவிட்டால் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு Bacu-up ம் உங்களுக்கு பயனளிக்காது.

Photobucket - Video and Image Hosting

சரி உங்களுக்கு மாற்றத்தெரியாவிட்டால், உங்கள் தரவுத்தள மேலாண்மை மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக phpMyAdmin மிக இலகுவானது.

கீழே காட்டப்பட்டது போன்று மாற்றுவதற்கு தேவையான Field களை தெரிவுசெய்து Edit buttn இனை அழுத்துங்கள்.


Photobucket - Video and Image Hosting

பின்னர் உங்களுக்கு தேவையான வாறு யுனிக்கோட் ஒருங்கு குறிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.


Photobucket - Video and Image Hosting

Read More..
புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை 11 comments

புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.

பழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்??? அவ்வளவுதான்…

என்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.

பிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.

Read More..
இன்றைய தமிழ்க் கவிதைகள். 2 comments

மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.

கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).

மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்

I have faced two major challenges in translating poetry. One in to bridge the culture gap betwwn the source language and the target language, perticularly between tamil and a non-indian language like English. The more daunting challenge is to recreate the emotional vibration and the rhythm of the original.

இந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.

மேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்

I found no sovereign formula for sucees here. There is no substitute for a constant search marked by honestly, judgement and sensitivity. I adobted as a guiding principle that there should be no violence to the cultural and emotional flavour of the original.

இந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.

இனி உள்ளடக்கத்துக்கு வந்தால்,

இந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரதிதாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.

இருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.

இந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).

மகாகவி – தேரும் திங்களும்

“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன் ……..”
“The whole town has assembled
And is pulling the chariot
Come along
Let us also give a hand
Came that person ……..”

முருகையன் – இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…
(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)

“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”
“Ours an ancient burden of two thousand years.
Bent under the load
We have embarked on a journey, long…….”

வ. ஜ. ச. ஜெயபாலன் – கடற்புறம்

“காலமகள் மணலெடுத்துக்
கோலமிட்ட கடற்புறத்திற்
ஏழை மகள் ஒருத்தி……”
“The sheshore
Time’s handiwork
A carpet of granular sand-
Stands a daughter of poverty……”

எம். ஏ. நுஃமான் – கவிதை உள்ளம்

“வெண்முகிலோடு நாமும்
மிதக்கலாம் வீசுகின்ற
தண்ணிய தென்றலூடும்
தளிர்களின் மென்மையூடும்…….”
“Let us-
Float with cotton wool clouds.
Merge and play
Like water uniting with water
with cool floating breeze……”

சு. வில்வரத்தினம் – காயம்

“காயம் பட்டவனின்
குருதி கதறிற்று
கல் எங்கிருந்து?…….”
“The blood of the wounded
Wailed
Where from this stone?….”

இளவாலை விஜயேந்திரன் – காணாமல் போன சிறுவர்கள்

“ஆலமரமிருக்கும்
கீழோ ஊஞ்சல்
ஆடிக்களிக்கவென
நீளவிழுதிருக்கும்……..”
“The mighty banyan tree
Aerial roots
As swings
To sway in glee……”

சிவரமணி – முனைப்பு

“பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தை போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்பட்டன……”
“Like a corpse
Ravaged by ghosts
I was desecrated.
Finer emotions
Vandalised
By blood-soaked hands”

உமாஜிப்ரான் – இம்சை

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்,
பசித்த புலியின் குரூர வசீகரம்…..”
“Body bursting with machismo
Roving eyes
Brimming with leahery
With the savage allure
Of a hungry tiger on prowl….”

இவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.

Read More..
இதெல்லாம் கூட USB இல 0 comments

USB இல வேலைசெய்யிற பல கணினி சார் பொருட்களை கண்டிருப்பிங்கள். இது எப்படி இருக்கு எண்டு பாருங்கோ. (நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது)


































Read More..