சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.
1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.
வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.
ஆனால் இதிலே
மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை
ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.
இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.
ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.
ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.
ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.
இந்த படத்தை பலபேர் பார்த்திருக்க கூடும். பார்க்காதவர்களுக்காக இங்க.. இதில எனக்கு மிகப்பிடிச்சது கியூபா தொடர்பான குறிப்பு.
இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டியவற்றில் ஒன்று CSS. மிக இலகுவாக இணையப்பக்கங்களை அழகுபடுத்த இது உதவுகின்றது. நான் எழுதிவரும் வேர்ட்பிரஸ் தொடரிலும் theme வடிவமைப்பின் போது CSS பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு அதனை இலகுவாக சொல்லவும், CSS கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்களுக்கும், மற்றும் CSS இனை இலகுவாக கையாளவும் நான் உருவாக்கி இருக்கின்ற இந்த CSS HELP SHEET உதவியாக இருக்கும்.

தரவிறக்கி பாருங்கள். பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன.

புதிய நட்சத்திர குறிகள்
நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய மின்னஞ்சல்களை நட்சத்திரமிட்டு வைக்க இந்த வசதி கைகொடுத்து வந்தது. ஆனால் அதிகளவான மின்னஞ்சல்கள் நடசத்திரமிடப்படும்போது அவற்றில் முக்கியமானவற்றை கண்டு பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு தீர்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரட்டையில் படங்கள்.
ஜிமெயில் சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒன்று அரட்டை. அதில் மிக முக்கியமான ஒரு வசதியை ஜிமெயில் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இதன்மூலம் அரட்டை செய்பவரின் புகைப்படம் கீழ்காட்டப்படவாறு அரட்டை வின்டோவில் தெரியும்.

இலகுவான தொடுப்புக்கள் அமைக்கும் வசதி
இதன் மூலம் நாம் அடிக்கடி ஜிமெயிலில் செய்யும் வேலைகளுக்கு குறுக்கு வழியொன்றை (Shortcut) ஒன்றினை அமைத்துக்கொள்ள முடியும்.

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு இலங்கை நிறுவனத்தின் ஒழுங்கு படுத்தலில் பல்வேறு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் இந்நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு களைகட்டியிருந்தது. பல்வேறு சமய மற்றும் சமூகப்பெரியார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு யாழ் அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஆசியுரை வழங்கும் நல்லை ஆதீன இரண்டாம் குருமகா சந்நிதானம் சிறீல சிறீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

செயல்திறன் அரங்க இயக்கம் வழங்கிய நாடகத்திலிருந்து…


