தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. …

பின்னூட்டங்கள்