மிகப்பிரபலமான வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் தனது 3.0 வது பதிப்பினை எட்டியுள்ளது. (இப்பொழுது RC1 வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் பயனர் பாவனைக்கு வரும்). இந்தப்பதிப்பில் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு என்பதனைத்தாண்டி Content Management System என்றபக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இப்பொழுது இப்புதிய பதிப்பில் கிடைக்கும் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.
நிறுவுதல்.
வழமைபோன்ற மிக இலகுவான நிறுவதலை இந்த பதிப்பு கொண்டிருந்தாலும் பயனாளர்கள் தங்களுக்குரிய பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் நிறுவலின்போதே தேர்ந்தெடுக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சாதாரண பயனாளர்களுக்கு தங்கள் …
வேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள்
Boks – Visual gird editor
நேற்றைய எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் CSS Grid framework குகள் பற்றி சொல்லியிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தாலும் நான் பயன்படுத்துவது blueprint grid framework. இதற்கு முக்கியமான ஒரு காரணம் Boks எனும் மென்பொருள்தான்.
இந்த மென்பொருள் AIR மென்பொருள் ஆக இருப்பதனால் அனைத்து இயங்குதளத்திலும் இயங்கும். இந்த மென்பொருளினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக உங்கள் layout களை வரைந்து கொள்ள முடியும். முடிவில் இம்மென்பொருள் உங்களுக்கு அதற்கான …
ஆறு CSS Grid framework குகள்
ஒரு சாதாரணமான இணையத்தளத்தை வடிவமைப்பதாயினும் சரி சிக்கலான சஞ்சிகை போன்ற வடிவமைப்பை கொண்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும் சரி அதன் இனை இலகுவாக அனைத்து உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யக்கூடியதானதாக உருவாக்கிக்கொள்ள CSS Grid framework குகள் பயன்படுகின்றன.
நீண்ட காலமாகவே பக்க வடிவமைப்புகளை செய்ய அச்சகங்களில் Grid பயன்படுகின்றது. இணைய வடிவமைப்பில் Grid இனை பயன்படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த Grid framework கள் layout ஒன்றினை உருவாக்கும் நேரத்தினை சில நிமிட வேலைகளாக குறைத்துவிடுகின்றது. …
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பெருகவும் வாழ்வு சிறக்கவும் ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் யார்?
நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது.
நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.
காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் …

பின்னூட்டங்கள்