<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>OORODI : : ஊரோடி &#187; இலக்கியம்</title>
	<atom:link href="http://oorodi.com/category/literature/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://oorodi.com</link>
	<description>அலட்டல்களும் ஒப்பாரிகளும்</description>
	<lastBuildDate>Sat, 29 May 2010 06:21:42 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.8.4</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>நான் யார்?</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d.html#comments</comments>
		<pubDate>Sun, 28 Mar 2010 16:42:33 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[ஊரோடி]]></category>
		<category><![CDATA[நெஞ்சுவிடு தூது]]></category>
		<category><![CDATA[பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=689</guid>
		<description><![CDATA[நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது. 
நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.
காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது. </p>
<p>நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.</p>
<p>காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே பிரமம். அந்தப் பிரமந்தான் நமது இருதயக் குகைக்குள் &#8216;நான்&#8221; &#8216;நான்&#8217; என்று சொல்;லிக்கொண்டிருக்கின்றது. ஆகவே &#8216;நான் பிரமம்&#8217; என்று முடிவு செய்தவன் அந்த வேதாந்தி.</p>
<p>உலகாயதன் வேதாந்தி ஆகிய இருவருஞ்சொன்ன விடைகளைக் கேளாமலே கேட்டுக்கொண்டு, அவர்களை பாராமலே பார்த்துக்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளியிருக்கின்றார் மௌனதவ முனிவர் ஒருவர். பயனில் சொற் பயிலாதவர் அவர். </p>
<p>எதிரிலிருந்த ஏனையவர்கள் மௌனதவமுனிவர் முகத்தை நோக்குகின்றார்கள். அவருடைய முகாரவிந்தம் மெல்ல மெல்ல இதழ் அவிழ்கின்றது. </p>
<p>இருவர் கூற்றும் பொய் என்கின்றது, அம்முனிவருடைய திருவாய் மலர். எங்கும் நிசப்தம் குடிகொள்ளுகின்றது. அதேசமயம் ஒருவகை ஏக்கம் தலைநிமிர்கின்றது. உலகாயதம் பொய்யாக போய்த்தொலையட்டும். வேதாந்தமுமா பொய் என்ற வினா எழுகின்றது. </p>
<p>தவமுனிவர் சற்றேனுந் தயங்காது தமது நாவை சற்றே பெயர்த்து &#8216;புரை தீர்ந்த&#8217; என்று கூறி அமர்கின்றார். </p>
<p>வேதாந்தம் &#8216;நான் பிரமம்&#8217; என்பது &#8216;புரை தீர்ந்த பொய்&#8217; என்றது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து. </p>
<p>பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த<br />
நன்மை பயக்கும் எனின்.</p>
<p>உபநிடத முனிவர்கள் சார்ந்ததன் வண்ணமாகும் ஆன்மாவை உலகாயதன் முடித்துக்காட்டிய இந்த உடம்பின் வேறாகக் காணுதற்கு வழி வகுத்திருக்கின்றார்கள். முனிவர்கள் வழியிற் செல்லுஞ் சீடன், உடம்பை பொய்ச்சார்பு என விடுத்து, மெய்சார்பை உணர்ந்து, மெய்ச்சார்பாகிய பிரமமாகத் தன்னைக் காணுகின்றான். ஒருநாள் நான் உடம்பு என்றவன், மற்றொருநாள் நான் பிரமம் என்பான். அவ்வளவில் முனிவர் உபநிடத பாடத்தை முடித்து ஆசிவழங்கி மகிழுகின்றார். </p>
<p>அப்பால், சாதகனாகிய மாணவனுக்கு &#8216;கண்ட இவை அல்லேன் நான் காணாக் கழிபரமும் நான் அல்லேன்&#8221; என்பதாகிய சிவஞானம் சித்திக்கின்றது. மேற்காட்டிய தொடர்கள் சிவஞானசித்தியார் ஒன்பதாஞ் சூத்திரம் ஏழாஞ்செய்யுளில் முதற்கண் உள்ளவை. </p>
<p><small>கண்ட இவை &#8211; காணப்பட்ட தேகாதிப் பிரபஞ்சங்கள், காணாக் கழிபரம் &#8211; கருவி காரணங்களுக்கு எட்டாத பிரமம்.</small> </p>
<p>யோகிகள் கருவி காரணங்களை விலகாமல் விலகி நின்று, அவைகளுக்கு எட்டாதவைகளை உணருகின்றார்கள். தேகச்சார்பை விலகாமல் விலகிப் பிரமத்தைச் சார்ந்து நான் பிரமம் என்று காணுவது ஒரு யோகநிலை. இந்த யோக நிலையை உற்றவர்கள், &#8216;நான் சரீரம்&#8221; என்பது எத்துணைப் பொய்யோ, அத்துணைப் பொய் &#8216;நான் பிரமம்&#8217; என்பதும் என்றுணர்ந்து, சிவஞானம் சித்திக்கப் பெற்று, அச்சிவஞானபோதத்தால், சிவத்தின் உண்மையியல்பையும், அச்சிவத்தின் வேறாக எண்ணமுடியாத சிவமயமான தம் உண்மையியல்பையும் உணராதே உணர்ந்து, &#8216;நான் அது&#8217; என்ற பேதம் தோன்றாதே இருமையின் ஒருமை உறுவார்கள். </p>
<p>இஃது ஏகபாவம் எனப்படும் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்த முத்திநிலை. இந்நிலையோடு ஒப்பிடும்போது &#8216;நான் பிரமம்&#8217; என்கின்ற யோகநிலை பொய். ஆனால் மெய்நிலைக்கு அது சாதகம். ஆதனால் அந்தப் பொய், புரை தீரந்த பொய்.</p>
<p>&#8216;காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம்&#8221; என்பது சிவஞானசித்தியார். ஞானம் மூன்று வகை. அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. முறையே ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தது. பதிஞானம்-சிவஞானம் எனப்படும். சிவஞானமாவது திருவருள். &#8216;அவனருளாலே அவன் தாள்வணங்கி&#8217; என்ற திருவாசகம் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. </p>
<p>மூவகை ஞானங்களும் &#8216;நான் யார்&#8217; என்ற வினாவை விடுவித்தற்கு உபகாரமானவைகள். பதி ஞானமாகிய சிவஞானத்தாலே தான் &#8211; நான் &#8211; என்பதன் உண்மை இயல்பு சித்திக்கும் என்பது காட்டப்பட்டது. </p>
<p>பசு ஞானத்தினாலே நான் பிரமம் என்ற உணர்வு பிறக்கும். அதனால் நான் என்பதன் உண்மையியல்பு சித்தியெய்தாது. இந்நிலையை முடிந்த முடிபு எனக் கொள்ளுபவர்கள் ஏகான்ம வாதிகள். இவர்கள் கொள்கை ஏகானம் வாதம். </p>
<blockquote><p>தாம் பிரமங் கண்டவர்போல்<br />
தம்மைக் கண்டு ஆங்கது வே<br />
நான் பிரமம் என்பவர் பால்<br />
நண்ணாதே</p></blockquote>
<p>என்பது உமாபதி சிவம் அருளிய நெஞ்சுவிடு தூது.</p>
<p><strong>இந்த நான் யார்? என்கின்ற கட்டுரை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலே எழுதப்பெற்று கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் 1964 கார்த்திகையிலே வெளியிட்ட &#8216;சிவசக்தி&#8217; மலரில் பிரசுரமானது.</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1.html#comments</comments>
		<pubDate>Fri, 22 Aug 2008 16:16:52 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[அன் விகுதி]]></category>
		<category><![CDATA[இரவிசங்கர்.]]></category>
		<category><![CDATA[இலக்கணம்]]></category>
		<category><![CDATA[காண்டிகை உரை]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தொல்காப்பியம்.]]></category>
		<category><![CDATA[நன்னூல்]]></category>
		<category><![CDATA[விகுதி]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=524</guid>
		<description><![CDATA[இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை  இட்டிருந்தார். அதில் அவர்,
counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு <a href="http://blog.ravidreams.net/ஆன்/" target="_blank">பயனுள்ள பதிவினை</a>  இட்டிருந்தார். அதில் அவர்,</p>
<blockquote><p>counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.</p>
<p>* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.</p></blockquote>
<p>என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,</p>
<blockquote><p>அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.</p>
<p>ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.</p></blockquote>
<p>என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.</p>
<blockquote><p>இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.</p></blockquote>
<p>இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.</p>
<p>ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம்.  செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.</p>
<p><strong>விகுதி.</strong></p>
<blockquote><p>அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்<br />
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்<br />
அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்<br />
க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்<br />
ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்<br />
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.</p></blockquote>
<p>என்று <em>நன்னூல் </em>விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.</p>
<p>இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.</p>
<p>இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று <em>காண்டிகை உரை</em> சொல்கிறது.</p>
<p>இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.</p>
<p><strong>இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது. </strong></p>
<p>வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் &#8220;னவ்வீறு&#8221; சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.</p>
<p>வடிகட்டி எனும்போது அங்கு சேரும் &#8220;இ&#8221; விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு &#8220;இ&#8221; விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.</p>
<p>அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் &#8220;அன் விகுதி&#8221; கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1.html/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>பெயல் மணக்கும் பொழுது &#8211; ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%88%e0%ae%b4.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%88%e0%ae%b4.html#comments</comments>
		<pubDate>Sun, 25 May 2008 15:58:42 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[பெண் கவிஞர்]]></category>
		<category><![CDATA[மங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=391</guid>
		<description><![CDATA[மிக அண்மையில் &#8220;பெயல் மணக்கும் பொழுது&#8221; என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.



தொகுத்தலின் நிமித்தம்&#8230; என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது.
அதில் அவர்&#8230;
மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மிக அண்மையில் &#8220;பெயல் மணக்கும் பொழுது&#8221; என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.<br />
<center><br />
<img src="http://oorodi.com.s58100.gridserver.com/wp-content/uploads/2008/05/peyal_cover.jpg" alt="" title="peyal_cover" width="200" height="304" class="alignnone size-full wp-image-392" /><br />
</center><br />
தொகுத்தலின் நிமித்தம்&#8230; என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது.</p>
<p>அதில் அவர்&#8230;</p>
<blockquote><p>மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது.</p></blockquote>
<p>இவரின் பெண்கவிஞர்களின் கவிதைக்கான தேடல் இவர் குறிப்பிடும் கவிதைத்தொகுப்புகளிலிருந்தே தெரியவருகின்றது.</p>
<blockquote><p>1986 சொல்லாத சேதிகள் தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் பயணம், மறையாத மறுபாதி, உயிர்வெளி, வெளிப்படுத்தல், எழுதாத என் கவிதை என்று கடந்த இருபது ஆண்டு காலமாக விரிவடைந்துள்ளது. சிவரமணி கவிதைகள் தொகுக்கப்பட்ட பின்னர், செல்வி-சிவரமணி கவிதைகள், ஒளவையின் எல்லைகடத்தல், ஆழியாளின் உரக்கப்பேசு, துவிதம், சுல்பிகாவின் உயிர்த்திருத்தல், மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள், பெண்ணியாவின் என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை, நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம், உயிர்த் தீ, லுணுகலை ஹஸீனா புஹாரின் மண்ணிழந்த வேர்கள், மேஜர் பாரதியின் காதோடு சொல்லிவிடு அகிய தொகுதிகள் என் பார்வைக்கு கிட்டின. எனக்கு இன்னும் கிட்டாத பாலரஞ்சினி சர்மாவின் மனசின் பிடிக்குள், கோசல்யா கவிதைகள், அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் ஒரு வசந்தம், அனாரின் கவிதைத்தொகுதி என்று பட்டியல் நீள்கின்றது. </p></blockquote>
<p>மேலும் இவர் தொகுப்பு தொடர்பாய் சொல்லும்போது.</p>
<blockquote><p>இத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கின்றேன். இன்னும் பலரை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒருசேர இருப்பது குறித்து அக்கவிஞர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். வௌ;வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால்<br />
தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைத் தொகுதி என்ற வகையில் அனைத்து தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது. </p></blockquote>
<p>இத்தொகுப்பிலே, 92 பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. வழமையாக எந்த ஒரு கவிதைத்தொகுப்பையும் வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் இந்த கவிதைத்தொகுப்பை வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். கவிதைக்கு கவிதை மாறுபடும் அரசியல் சார்பு மற்றும் சிந்தனைகள் எங்கள் (வாசகர்களின்) அரசியல் சார்புகள் மற்றும் சிந்தனைகளோடு மாறிமாறி முரண்படுகிறது, சார்பாகின்றது. வாசித்து முடியும் போது மீண்டும் பூச்சியப்புள்ளியிலேயே கொண்டு வந்து நிறுத்துகின்றது.</p>
<p>ஆதலினால் தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த தொகுதியெங்கும் நர்த்தனமாடும் அரசியல் சார்பும் சிந்தனையும் புதிதாகையால் அல்லது கேள்வி ஞானமேயாகையால் இத்தொகுப்பு அவர்கள் மீது எந்தவித சிந்தனா மாற்றத்தையும் அல்லது எண்ணத்தையும் கொண்டுவரும் என எண்ண முடியாது.</p>
<p><strong>இனி தொகுக்கப்பெற்றிருக்கும் கவிதைகளிலிருந்து சில வரிகள்</strong></p>
<p><strong>அ. காந்தாவின் எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த</strong></p>
<blockquote><p>&#8230;..எந்த மகனுக்காய்<br />
என் கால்களை நகர்த்த?<br />
நேற்று விதையுண்டு போன<br />
மூத்தவனுக்கா? &#8211; இல்லை<br />
இப்போதுதான்<br />
விதைக்கப்பட்ட என்<br />
இளைய குஞ்சுக்கா?&#8230;</p></blockquote>
<p><strong>சிவரமணியின் யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்</strong></p>
<blockquote><p>&#8230;.நட்சத்திரம் நிறைந்த இரவில்<br />
அதன் அமைதியை உடைத்து வெடித்த<br />
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை<br />
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை<br />
இல்லா தொழித்தது.</p>
<p>எஞ்சிய சிறிய பகலிலோ<br />
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்<br />
கிளித்தட்டு மறிப்பதையும்<br />
அவர்கள் மறந்து போனார்கள்&#8230;.</p></blockquote>
<p><strong>நளாயினி தாமரைச்செல்வனின் புதிதாய் பிறந்து விட்டு போகின்றேன்.</strong></p>
<blockquote><p>&#8230;.போதும்<br />
நீ என் மீது வைத்த காதலும்<br />
அதன் மீதான நம்பிக்கையும்</p>
<p>போனால் போகிறது<br />
நான் உன் மீது<br />
கொண்ட காதலை புதைத்து<br />
மீண்டும் புதிதாய்<br />
பிறந்து விட்டு போகின்றேன்.</p></blockquote>
<p><strong>கப்டன் வானதியின் எழுதாத கவிதை&#8230;.</strong></p>
<blockquote><p>&#8230;..சீறும்<br />
துப்பாக்கியின் பின்னால்<br />
என்உடல்<br />
சின்னாபின்னப்பட்டு போகலாம்.<br />
ஆனால்<br />
என் உணர்வுகள் சிதையாது<br />
உங்களை சிந்திக்க வைக்கும்<br />
அப்போது<br />
எழுதாத என் கவிதையை<br />
எழுதுங்களேன்&#8230;&#8230;</p></blockquote>
<p><strong>நாதினியின் எழுதாத உன் கவிதை</strong></p>
<blockquote><p>&#8220;எழுதாத என் கவியை<br />
எழுதங்களேன்&#8221;<br />
எனும் என் கவிதை<br />
எழுதப்பட்டு விட்டது</p>
<p>உப்பு வெளியில்<br />
உருகிய உங்கள்<br />
உடல்கள் மீது<br />
எமது வீரர்கள்<br />
எழுதாத உன் கவியை<br />
எழுதி விட்டார்கள்&#8230;&#8230;</p></blockquote>
<p><strong>நாமகளின் யதார்த்தம்</strong></p>
<blockquote><p>&#8230;.அம்புலன்ஸ் வந்து<br />
எல்லாவற்றையும்<br />
அள்ளிக்கொண்டு போனது<br />
எஞ்சியதாய்<br />
கொஞ்சமாய் அவனது இரத்தம்,<br />
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்<br />
ஷெல் துண்டுகள்&#8230;<br />
அவ்வளவுதான்&#8230;&#8230;</p></blockquote>
<p><strong>ஜெ. நிரோசாவின் இயேசுவுக்கு ஒரு மடல்</strong></p>
<blockquote><p>&#8230;..நான் சொல்லுவது என்னவென்றால்<br />
நீர் மீண்டும் இவ்வுலகம் வரவேண்டும்<br />
இன்னொரு தடவை<br />
இவ்வுலகை மீட்க வேண்டும்&#8230;.</p>
<p>&#8230;.ஆ&#8230;..<br />
முக்கியமானதை மறந்துவிட்டேன்<br />
வரும்போது<br />
அடையாள அட்டையை<br />
மறந்து விடாதீர்..</p></blockquote>
<p><strong>பாமதியின் யுத்தத்தால் தொலைந்தோம்</strong></p>
<blockquote><p>&#8230;.ஆயிரக்கண்க்கான<br />
இந்த சமாதிகளிடமா<br />
எமது விடுதலையை கொண்டாட முடியும்.</p>
<p>விட்டுவையுங்கள்<br />
யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்<br />
யுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணைப்பற்றி<br />
எழுத குருதி நிரம்பிய பேனாவையும்<br />
மனித நேயத்தையும்<br />
உணர்த்த விட்டுவையுங்கள்.</p></blockquote>
<p><strong>மேஜர் பாரதியின் அன்பான அம்மா</strong></p>
<blockquote><p>&#8230;..அன்பான அம்மாவே!<br />
நான் உன்னை<br />
அளவு கடந்து நேசிக்கின்றேன்<br />
அதனிலும் பார்க்க<br />
நான் ஓடி விளையாடிய<br />
என் வீட்டு முற்றத்தை,<br />
நான் கால் பதித்த<br />
ஒற்றையடிப் பாதைகளை,<br />
செம்பாட்டு மண்படிந்த<br />
என் தெருக்களை,<br />
சணல் பூத்து குலுங்கும்<br />
என் தேசத்தை,<br />
தோட்டவெளிகளை&#8230;&#8230;&#8230;</p></blockquote>
<p>சித்திரலேகா மௌனகுருவினதும், வ. கீதாவினதும் பின்னுரைகள் கவிதைகள் தொடர்பாய் மேலும் விளக்கமாய் சொல்கிறது.</p>
<p>வெளியீடு : மாற்று.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%88%e0%ae%b4.html/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய தமிழ்க் கவிதைகள்.</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html#comments</comments>
		<pubDate>Fri, 11 Apr 2008 14:32:16 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[ஈழத்துக் கவிஞர்கள்]]></category>
		<category><![CDATA[உமாஜிப்ரான்]]></category>
		<category><![CDATA[மகாகவி]]></category>
		<category><![CDATA[முருகையன்]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=349</guid>
		<description><![CDATA[மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.
கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).
மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.</p>
<p>கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).</p>
<p>மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்</p>
<blockquote><p>I have faced two major challenges in translating poetry. One in to bridge the culture gap betwwn the source language and the target language, perticularly between tamil and a non-indian language like English. The more daunting challenge is to recreate the emotional vibration and the rhythm of the original.</p></blockquote>
<p>இந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.</p>
<p>மேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்</p>
<blockquote><p>I found no sovereign formula for sucees here. There is no substitute for a constant search marked by honestly, judgement and sensitivity. I adobted as a guiding principle that there should be no violence to the cultural and emotional flavour of the original.</p></blockquote>
<p>இந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.</p>
<p>இனி உள்ளடக்கத்துக்கு வந்தால்,</p>
<p>இந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரதிதாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.</p>
<p>இருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.</p>
<p>இந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).</p>
<p><strong>மகாகவி &#8211; தேரும் திங்களும்</strong></p>
<blockquote><p>“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே<br />
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை<br />
என்று<br />
வந்தான் ஒருவன் ……..”<br />
“The whole town has assembled<br />
And is pulling the chariot<br />
Come along<br />
Let us also give a hand<br />
Came that person ……..”</p></blockquote>
<p><strong>முருகையன் &#8211; இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…</strong><br />
(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)</p>
<blockquote><p>“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு<br />
மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்<br />
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”<br />
“Ours an ancient burden of two thousand years.<br />
Bent under the load<br />
We have embarked on a journey, long…….”</p></blockquote>
<p><strong>வ. ஜ. ச. ஜெயபாலன் &#8211; கடற்புறம்</strong></p>
<blockquote><p>“காலமகள் மணலெடுத்துக்<br />
கோலமிட்ட கடற்புறத்திற்<br />
ஏழை மகள் ஒருத்தி……”<br />
“The sheshore<br />
Time’s handiwork<br />
A carpet of granular sand-<br />
Stands a daughter of poverty……”</p></blockquote>
<p><strong>எம். ஏ. நுஃமான் &#8211; கவிதை உள்ளம்</strong></p>
<blockquote><p>“வெண்முகிலோடு நாமும்<br />
மிதக்கலாம் வீசுகின்ற<br />
தண்ணிய தென்றலூடும்<br />
தளிர்களின் மென்மையூடும்…….”<br />
“Let us-<br />
Float with cotton wool clouds.<br />
Merge and play<br />
Like water uniting with water<br />
with cool floating breeze……”</p></blockquote>
<p><strong>சு. வில்வரத்தினம் &#8211; காயம்</strong></p>
<blockquote><p>“காயம் பட்டவனின்<br />
குருதி கதறிற்று<br />
கல் எங்கிருந்து?…….”<br />
“The blood of the wounded<br />
Wailed<br />
Where from this stone?….”</p></blockquote>
<p><strong>இளவாலை விஜயேந்திரன் &#8211; காணாமல் போன சிறுவர்கள்</strong></p>
<blockquote><p>“ஆலமரமிருக்கும்<br />
கீழோ ஊஞ்சல்<br />
ஆடிக்களிக்கவென<br />
நீளவிழுதிருக்கும்……..”<br />
“The mighty banyan tree<br />
Aerial roots<br />
As swings<br />
To sway in glee……”</p></blockquote>
<p><strong>சிவரமணி &#8211; முனைப்பு</strong></p>
<blockquote><p>“பேய்களால் சிதைக்கப்படும்<br />
பிரேதத்தை போன்று<br />
சிதைக்கப்பட்டேன்<br />
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்<br />
இரத்தம் தீண்டிய கரங்களால்<br />
அசுத்தப்பட்டன……”<br />
“Like a corpse<br />
Ravaged by ghosts<br />
I was desecrated.<br />
Finer emotions<br />
Vandalised<br />
By blood-soaked hands”</p></blockquote>
<p><strong>உமாஜிப்ரான் &#8211; இம்சை</strong></p>
<blockquote><p>ஆண்மை தெறிக்கும் தேகம்<br />
விழுங்கும் முனைப்பில்<br />
அலைந்து மேயும் விழிகளில்<br />
இரைதேடும்,<br />
பசித்த புலியின் குரூர வசீகரம்…..”<br />
“Body bursting with machismo<br />
Roving eyes<br />
Brimming with leahery<br />
With the savage allure<br />
Of a hungry tiger on prowl….”</p></blockquote>
<p>இவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழிலிருந்து ஜீவநதி</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf.html#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 21:18:19 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[இதழ்]]></category>
		<category><![CDATA[ஜீவநதி]]></category>
		<category><![CDATA[நூல்]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=413</guid>
		<description><![CDATA[அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்



என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து ...]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>அறிஞர் தம் இதய ஓடை<br />
ஆழ நீர் தன்னை மொண்டு<br />
செறி தரும் மக்கள் எண்ணம்<br />
செழித்திட ஊற்றி ஊற்றி…<br />
புதியதோர் உலகம் செய்வோம்</p></blockquote>
<p><center><br />
<img src="http://i98.photobucket.com/albums/l252/bagerathan/jeevanathy.jpg" alt="" /><br />
</center></p>
<p>என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து வருமா?? அல்லது வராமல் விட்டிடுமோ?? வரவேணும்.</p>
<p>கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், சிறுகதைகள், நூல் அறிமுகம், கலைஇலக்கிய நிகழ்வுகள் எண்டு எல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கு.</p>
<p>புதுப்புனல் என்கிற பகுதியூடாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மிகச்சிறப்பாய் உள்ளது. இது மேலும் பலரை எழுதவும் வாசிக்கவும் வைக்கும்.</p>
<p>எழுத்துருக்களை பயன்படுத்துதலில இன்னும் சிறிய கவனம் வேண்டும் எண்டுறது என்ர எண்ணம். த. ஜெயசீலன் எழுதிய இரண்டு கவிதைகளையுமே வாசிக்க முடியேல்ல. என்னைப்பொறுத்தவரை எழுத்துரு அவ்வளவு மோசமா இருக்கு.</p>
<p>முதல் கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதின “இன்றைய நிலையில் ஊடகத்துறை வளர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செல்வாக்கு”. சிவத்தம்பி ஐயா கட்டுரையை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம் அவ்வளவு ஆங்கில சொல்லுகள் அடைப்புக்குறிகளுக்குள்ள. புகையிரத அமைச்சு ரெயில்வே எண்டு அடைப்புக்குறிக்குள்ள போட வேண்டிய தேவை எனக்கு விளங்கேல்ல. மற்றபடி இதை இன்னமும் விரிவா எழுதியிருந்தா எனக்கு இன்னமும் விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்.</p>
<p>தாட்சாயணியின் கெடுபிடி சிறுகதையும், கொற்றை பி. கிருஸ்ணானந்தன் உடைய வல்லைவெளி கவிதையும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற கொன்வே பற்றி சொல்லுகின்றன.</p>
<blockquote><p>நோயின் கொடுமையினால்<br />
நொந்தவர் மயங்கிவிழ<br />
“கொன்வோய்” போய்முடியத்<br />
தொண்ணூறு நிமிடங்கள்<br />
ஆவி பிரிந்ததனால்<br />
“அங்கிருந்து” அனுப்பப்படும்<br />
பூதவுடல்களும்<br />
பொறுமைதனையிழந்து<br />
கண்ணைத்;திறந்து<br />
காரணத்தை கேட்கின்ற<br />
அதிசயங்கள் நடந்தாலும்<br />
ஆச்சரியமில்லை</p></blockquote>
<p>என்கிறார் கிருஸ்ணானந்தன்.</p>
<p>பேராசிரியர் சபா. ஜெயராசா எழுதியிருக்கும் “நவீன கலை இலக்கியப்புலப்பாடுகள்” எண்ட கட்டுரையை இன்னொருக்கா வாச்சா என்ன சொல்லுறார் எண்டு விழங்கும் எண்டு நினைக்கிறன்.</p>
<p>க. திலகநாதன் தன் நாட்டிய சாத்திரம் &#8211; சில அரங்கக்குறிப்புகள் என்கிற கட்டுரையில அரங்க முறைமைகள் பற்றி விளக்குகிறார். நாட்டிய சாத்திரத்தில 6000 சூத்திரம் இருக்குதாம். அப்படியா???</p>
<p>அரண் கதை மூலம் அ. தனஞ்செயன் என்ன சொல்ல வாறார் எண்டு விளங்கேல்ல.</p>
<p>நூல் அறிமுகப்பகுதியில ஊடறு வெளியீடாக வந்த “இசை பிழியப்பட்ட வீணை” கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி நிச்சயமாக எனக்கு பயனுள்ள பகுதியாக இருக்கும். புத்தகங்களை தேடிக்கண்டுபிடிக்கிற வேலை குறையும்.</p>
<p>குப்பிளான் ஐ. சண்முகம் தனது பலதும் பாராட்டும் பத்தி பகுதியல நுண்கலைத்துறையின் கண்காட்சி பற்றி எழுதியிருக்கிறார். அதில் அவர்களுக்கு மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறும் துணிவு இன்னமும் இல்லை என்று எழுதியிருக்கின்றார். அதற்கு கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளை உதாரணத்துக்கு இழுக்கின்றார். மரபார்ந்த கட்டுப்பாடுகளை மீறுவதாயின் அதன் கருப்பொருள் நிச்சயமாக ஓவியர்களை தூண்டுவதாக இருக்கவேண்டும். அப்படியான கருப்பொருள்களை நினைப்பதே தடையாயிருக்க எங்கிருந்து வரும் ஓவியம் என்பதை அவர் எண்ணத் தவறிவிட்டார். இந்த கண்காட்சியை நான் பார்ப்பதற்கு சில நாட்களின் முன்னர் ஒரு ஓவியக் கண்காட்சியை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தேன். அதனை விட இந்த கண்காட்சி பலமடங்கு சிறந்ததாக இருந்தது என்பது என் எண்ணம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறிப்பேட்டிலிருந்து &#8211; அ. யேசுராசா</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85.html#comments</comments>
		<pubDate>Thu, 22 Nov 2007 22:53:37 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[அ. யேசுராசா]]></category>
		<category><![CDATA[குறிப்பேட்டிலிருந்து]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=440</guid>
		<description><![CDATA[இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து தங்கியிருந்த காலம் வரைக்கும் புத்தகத்திலதான் காசு கூடும். “இண்டைக்கு ஒரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போயிராதயுங்கோ பாருங்கோ சனிபோல வாருங்கோ”, இது ரவி அண்ணை. வந்ததுக்கு ஒண்டெண்டான்ன வேணும் எண்டு சொல்லி அ. யேசுராசாவோட குறிப்பேட்டிலிருந்து… புத்தகத்தை வாங்கி கொண்டு வந்து ஒரே மூச்சில வாசிச்சாது.</p>
<p>அலை வெளியீட்டில வைகாசி 2007 இல வெளிவந்திருக்கு. 2003 இல வந்த அவற்ற பதிவுகள் மாதிரிதான், இருந்தாலும் பதிவுகள் “அலை” சஞ்சிகையில வந்தது (பிறகு அலை பத்மநாப ஐயரோட முயற்சியால தொகுப்பாயும் வெளிவந்தது) ஆனா இது நீண்ட காலப்பரப்பை உள்ளடக்கிறதால அக்காலத்தாக்கங்கள் முதிர்வுகளின் வெளிப்பாடுகள் அப்பிடியே தெரியுது, 1970 இல எழுதின “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” தொடக்கம் 2006 இறுதியில எழுதின “மனிதனாயிருந்த மனிதன்” ஏ.ஜே பற்றிய நினைவுக்குறிப்புகள் வரைக்கும் இருக்குது. இது ஒரு விமர்சகனோட குறிப்புகளாய் இருக்கிறதால இதில இருக்கிற குறிப்புகள் பற்றி எதுவுமே நான் சொல்லுறதுக்கில்ல. ஆனா நீங்களே அவரோட என்னுரைய கீழ வாசிச்சு பாருங்கோ.</p>
<hr />
<p>‘………..தேவையற்று போய்விட்ட மதுபானக் கடையைப்போல இப்போ கலை இலக்கியக் ‘கடை” களும் எனக்கு தேவைற்றுத் தெரிந்தன……….” &#8211; மு. தளையசிங்கம்.</p>
<p>மு. த. வின் ‘பக்குவம்” என்னிடமில்லாததால் இன்னும் இந்தக் கலை, இலக்கியத் துறைகளை என்னால் புறக்கணிக்க இயலவில்லை. ஆனால், சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது நினைவுக்கோப்பை கசப்பில் நிரம்பி வழிகின்றது.</p>
<p>எமது கலை, இலக்கிய வாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட ‘முகங்கள்”? பட்டம், பணம், பதவி &#8211; பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலைநிறுத்த முயல்கின்றனர்!</p>
<p>கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலமிக்க தந்திரச்செயல்களுடன் &#8211; ராஜ கம்பீரராய் பெருமைகாட்டி பவனி வருகின்றனர். அதிசய ஆடை ‘அணிந்த” அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மில் பலர் ஏனில்லை?</p>
<p>நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றிடையே இடைவெளியில்லாத-<br />
இயன்றவரை நேர்மையான வாழ்வை கொண்டிருக்க வேண்டுமென்ற-</p>
<p>அறம்சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.</p>
<p>இந்நிலையில் இலட்சியத்தையும் உன்னதத்தையும் அவாவுகின்ற எழுத்தாளனை ‘சர்வாதிகாரி &#8211; கிட்லர்” எனச்சொல்லும் நோய்க்கூறான ‘பின்நவீனத்துவக் குரல்” ஒலிக்கத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதே.</p>
<p>மு.த. , ஏ.ஜே , போன்று முன்னுதாரணராய்க் கொள்ளத்தக்க இலக்கியக் காரரே எமக்குத் தேவை. புகழ், பணம், பதவி என்று அந்தரப்படாது தமது நம்பிக்கைகளுக்கு இயைய நேர்மையான மனிதராயே அவர்கள் வாழ்ந்தனர். அறவுணர்வு கொண்ட அத்தகையோரை காண்பது அரிதாகவே உள்ளது.</p>
<p>‘ஒரு வாசகனின் அபிப்பிராயம்!” எனது முதற் கட்டுரையாகும். கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்ட அக்கட்டுரை, இளைஞனாயிருந்த எனது இலக்கிய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்காக அவருக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.</p>
<p>கலாநிதி. கா. கைலாசபதியின் ‘சமர்” இதழ் கட்டுரையொன்றிற்கு பதிலாக எழுதப்பட்டதே ‘குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை!”. ஆனால் இக்கட்டுரையை வெளியிட சமர் ஆசிரியரான டானியல் அன்ரனி மறுத்துவிட்டார்.</p>
<p>தெல்லிப்பழை கலை இலக்கிய களம் ஒழுங்கு செய்த சிறுகதை நாள் நிகழ்ச்சியில் நானும் கட்டாயம் கட்டுரை வாசிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, ‘ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும்” என்ற தலைப்பினைத்தந்ததோடு, அதற்குத் துணை செய்யக்கூடிய சிறுகதைகள் பலவற்றை படிப்பதற்கும் தந்தவர் கலாநிதி நா. சுப்பிரமணியம்.</p>
<p>மாணவர் &#8211; இளைஞர்களுக்கான சாளரம் இதழில் அறிமுகக் கட்டுரையாக எழுதப்பட்டதே, சி. வி. வேலுப்பிள்ளையின் ‘தேயிலைத் தோட்டத்திலே….”</p>
<p>இறுதியாயுள்ள மூன்று கட்டுரைகளும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும். திசை வாரப்பத்திரிகையில் கடமையாற்றுகையில், பத்திரிகைத்தேவையும் பொருத்தமும் கருதி அவற்றை மொழிபெயர்த்தேன்.</p>
<p>எல்லாக்கட்டுரைகளும் ஏற்கனவே பிரசுரமாகியுள்ள போதும், தேவைப்பட்ட திருத்தங்களைப் பல கட்டுரைகளில் தற்போது செய்துள்ளேன். இக்கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்ட இதழ்களிற்கு எனது நன்றிகள்.</p>
<p><em>அ. யேசுராசா அவர்களின் முகவரி<br />
இல 1, ஓடைக்கரை வீதி,<br />
குருநகர்,<br />
யாழ்ப்பாணம்,<br />
இலங்கை.</em></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருவருட்பயன் &#8211; பண்டிதமணி</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a3.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a3.html#comments</comments>
		<pubDate>Mon, 08 Oct 2007 23:25:35 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[சி. கணபதிப்பிள்ளை]]></category>
		<category><![CDATA[திருவருட்பயன்]]></category>
		<category><![CDATA[பண்டிதமணி]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=435</guid>
		<description><![CDATA[பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும். இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். அவர் எழுதியிருந்த சில பழந்தமிழ் சமைய ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் <strong>உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும்.</strong> இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். அவர் எழுதியிருந்த சில பழந்தமிழ் சமைய நூல்கள் சார்பிலான கட்டுரைகளும் விளக்கவுரைகளும் அவரை ஒரு உரையாசியர் என்ற அளவில் கருதுமளவிற்கு இருக்கவில்லை.</p>
<p>இந்த புத்தகத்தை வாசிச்ச பிறகு அப்பிடி சொல்லேலுமோ?? நீங்களும் ஒரு பகுதியை பாருங்கோ.</p>
<p><strong>எமக்கெ னெவனுக் கெவைதெரியு மவ்வத்<br />
தமக்கவனை வேண்டத் தவிர்.</strong><br />
<em>(எமக்கு என் தெரியும், எவனுக்கு எவை தெரியும், அவ்வத் தமக்கு அவனை, வேண்டத் தவிர்)</em></p>
<p>எமக்கு என் தெரியும் &#8211; ஞான சந்ததியில் உன் முன்னோராகிய எமக்கு உனக்கு உணர்த்துமாற்றில் என்ன தெரியும்,<br />
எவனுக்கு எவை தெரியும் &#8211; அறிந்தோ ரெனப்படுவாருள் எவனுக்கு உய்யுமாறுகளில் எவை தெரியும்,<br />
அவ்வத் தமக்கு அவனை &#8211; வெவ்வேறு பந்த நிலையிலுள்ள ஆன்மாக்களுக்கு அவ்வந் நிலைக்குத் தக்கபடி உணர்த்தவல்ல தம்முதலாகிய அருட்குருவை,<br />
வேண்டத் தவிர் &#8211; பெறும்படி காத்திரு, மற்றவை அனைத்தையும் விடு, குருவின் பொருட்டே இவ்வுலகில் தங்கு.</p>
<p>“எமக்கென் தெரியும்” என்றார் ஞான சந்தான முதல்வர் ஆலமர் கடவுளாதலின்</p>
<p><em>“என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி<br />
என்னறிவி லாரறிக என்றொருவன் &#8211; சொன்னபடி<br />
சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்<br />
சொல்லக்கேள் நானுனக்கச் சொல்.”</em></p>
<p>என்னுந் திருக்களிற்றுப்படியார் காண்க.</p>
<p>“எவனுக்கு எவை தெரியும்” என்றார், ஓரான்மா தன்னைப்பற்றிய இருளைச்சார்ந்தறிதலும் இருணீங்கிய வழி ஒளியைச்சார்ந்தறிதலும் அன்றி வேறறிவு அதற்கின்மையின், பிறிதோரான்மாவிற்கு வேண்டியவைகளை அது அறியாதாதலின், அவ்வவ்வான்ம நிலையை அறிந்தருளவலல முதல்வனே வெளிப்பட்டுபகரிப்பனாதலின் அவ்வத் தமக்கு அவனை வேண்ட என்றார்.</p>
<p>இந்தப் பூமியிலே மானிடப்பிறவியிலன்றி ஞானம் வராதென்ப.</p>
<p><em>“தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து<br />
பவஞ்செய்து பற்றறுப்பா ராகத் &#8211; தவஞ்செய்த<br />
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்<br />
கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு”</em></p>
<p>என்பது சிவஞானபோத வெண்பா. சகலர்க்குப் பூமியில் குருவாக வந்து முதல்வன் உபகரித்தல் இன்றியமையாமையின் “வேண்டத்தவிர்” என்றார்.</p>
<p>ஏனைய நல்வினைகள் பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் ஆதலின் சிவபுண்ணியங்கள் இறப்பில் தவம் எனப்படுவன. சரியை கிரியை யோகங்களுக்குச் சிறந்த பயன் ஞானமே.</p>
<p><em>“சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன<br />
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே &#8211; ஆர்த்தகடல்<br />
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ<br />
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு”</em></p>
<p>என்றவாறு குருவின் உபதேசத்தாலன்றி ஞானமாகிய தெளிவு பிறவாது. முனிவர்கள் ஆலமர் கடவுளுடைய சின் முத்திரையினாலேயே ஞானமெய்தினரென்ப. “சரியை கிரியா யோகங்களைச் செய்துழி அவை ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா வாகலன்” என்பது சிவஞானபோதம்.</p>
<p>ஞானமும் அதனை யருளுகின்ற ஞானகுருவுமன்றி எடுத்த பிறப்புக்கு வேறுபயன் யாது மில்லையாதலின், “தவிர்” என்றார்.</p>
<p>இருப்பதாயின், அருட் குருவை வேண்டி இருக்குக.</p>
<p><strong>எப்படி இருக்கிறது பண்டிதமணியின் உரை ????</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a3.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கவிஞர்கள்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html#comments</comments>
		<pubDate>Fri, 06 Jul 2007 22:11:17 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[சி. கணபதிப்பிள்ளை]]></category>
		<category><![CDATA[பண்டிதமணி]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.com/?p=425</guid>
		<description><![CDATA[இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.
கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><em>இது பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையாகும். இலக்கிய வாசிப்பில் விருப்புடையோருக்காக இங்கே பதிவாகின்றது.</em></p>
<p>கவிதைகள் புத்தக வடிவத்திலும் பத்திரிகைகளிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கவிதை விமரிசனங்களும் நடக்கின்றன. மேலைத்தேசத்திலே ஒருவர் ஒன்று செய்தால் அதற்கு நூறு விமரிசனம் வந்துவிடும், இங்கே அவ்வளவு தூரம் அந்தத்துறை விரியவில்லை என்று ஒரு விமரிசனர் அழுகின்றார். பாவம் இனி அவர் கண்ணீர் வடிக்க வேண்டா. தினசரிப்பத்திரிகைகளிற் கூட ஒரு பகுதி கவிதை விமரிசனத்திற்கென்றே ஒதுக்கப்படுகின்றது. விமரிசனம் இதோ பெருகிவிடும். பயம் வேண்டா. ஆனால் உண்மைக்கவிதை ஏனைய வரிசையில் இருந்து உயிர்தப்புமோ என்றுதான் அச்சம் வருகின்றது. கவிதைப்பெருக்கும் விமரிசனப்போக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் காக்காய்ப்பொன்னையும் ஒன்று செய்து விடுமோ என்றுதான் எச்சரிக்கை விடுக்கவேண்டியவர்களாய் இருக்கின்றோம்.</p>
<p>” கவிகள், அதாவது கவிஞர்கள் உண்மையைச் சிந்தித்துக்கொண்டு சொல்வதில்லை. உண்மைக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். அவர்களால் நாட்டுக்கு பெருந்தீமை உண்டாகின்றது. அவர்களை அரசாங்கம் நாடுகடத்த வேண்டும்.”</p>
<p>என்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே, கிரேக்க தேச பேரறிஞரான பிளேற்றோ ஒரு பெரிய எச்சரிக்கை செய்திருக்கிறார். பிளோற்றோவின் எச்சரிக்கை நவீன விமரிசகர் சிலருக்கு பெரிய தலையிடியை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றது.</p>
<p>விமரிசகர்கள் பேரறிஞரான பிளேற்றோவைத் திட்டி வீண்பழி சுமத்தாமற் கவிதையையும் கவிஞர்களையும் வரிசை செய்து, தராதரங்களை ஆராய்ந்து, பிளேற்றோ வெறுக்கும் கவிகளை கண்டறிவதில் தமது விமரிசனத் துறையை விரிப்பது நன்று என்று தோன்றுகின்றது.</p>
<p>தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார், <strong>“நாம் எண்ணுகின்ற கேட்கின்ற கருத்துக்களை அப்படியே கொள்ளாமல், அக்கருத்துக்களை முதலில் ஐயுற்று பின் ஆராய்ந்து தெளிந்து, மெய்யான மூலக்கருத்தை அறிதல் வேண்டும்”</strong> என்று உண்மைக்கருத்தை காண்பதற்கு ஒரு சட்டம் வகுத்திருக்கின்றார்</p>
<blockquote><p>“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />
மெய்ப்பொருள் காண்ப தறிவு”</p>
<p>“ஐயத்தி வீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்<br />
வானம் நணிய துடைத்து”</p></blockquote>
<p>என்பன உண்மையைக்காண வகுத்த வழிகள்.</p>
<p>ஒரு வீரன் தயைகாட்டாமற் பகையை கொன்று குவித்தல் பேராண்மை. ஆனால், பகைவனுக்கு நினையாப்பிரகாரம் ஓர் இடையூறு நேர்ந்தால், உடனே அந்த வீரன் தன் பகைவனுக்கு உபகாரியாய் மாறவேண்டும். அது பேராண்மையாகிய வீரத்தின் சிகரமாயிருக்கும்.</p>
<blockquote><p>“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்<br />
ஊராண்மை மற்றதன் எஃகு”</p></blockquote>
<p>உபகாரியாய் மாறுதல், “பேராண்மை” என்ற வாளின் கூராயிருக்கும், என்றும் சொல்லலாம். வீரத்தைப்பற்றிய இந்த உண்மை திருவள்ளுவ நாயனாரின் தெய்வப்புலமையிற் கண்டது. இப்படியான <strong>அனேக உண்மைகள், இமாசலத்திலே மருந்துப்பூண்டுகள் பரவியிருப்பதைப்போலத் திருக்குறளாகிய பாற்சமுத்திரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன.</strong> அதுஅது கைவந்தவர்கள் அதில் அதில் ஈடுபட்டவர்கள் அதை அதைத் தம் வல்லமைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளுகின்றார்கள்.</p>
<p>கம்பர், வள்ளுவர் கண்ட வீரசிகரமான அமிர்த தாரையில் ஈடுபாடுற்று, அந்த வீரதீர அமிர்த தாரையை ஒரு சற்பாத்திரத்திலே ஏந்தி எடுத்து, வெகு பக்குவஞ்செய்து, அந்த உண்மையை ஒரு அமிர்த சஞ்சீவியாக்கி இந்த உலகுக்கு வழங்கியிருக்கின்றார். அந்த அமிர்த சஞ்சீவிதான் பின்வரும் பாட்டு:</p>
<blockquote><p>ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த<br />
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு<br />
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்<br />
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.</p></blockquote>
<p>தன் மனை வாழ்வுக்கு கேடு சூழ்ந்த மகாதுரோகியும் பராக்கிரமசாலியுமான இராவணன் நிராயுதபாணியாய், இருபது கைகளுந் தொங்கப் பத்துத் தலைகளுங் குனிந்து நாணி எதிரில் நிற்கின்றான். அவனை கொன்று குவிக்க அது நல்ல சமயம். சிறீராமன் தன் வீரத்துக்கு மறுச்செய்யவில்லை. உடனே உபகாரியாய் மாறி, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று அவனுக்கு உயிர்ப்பிச்சை வழங்கி, வீரசிகரத்தில் வள்ளலாய் விளங்குகின்றான். வள்ளுவர் கண்ட உண்மையைச் சற்பாத்திரமாகிய சிறீராமனில் வைத்துப் புனைந்து சொல்லுவது ‘தகும் தகும்’ என்று ஒப்புக்கொள்ளுகின்றது புலமையுகம். அதனாலே கம்பர் சாதாரண கவிச்சக்கரவர்த்தியாயினார். கம்பர் தாமாக ஓர் உண்மையை காணாமலிருத்தல் கூடும். ஆனால், வள்ளுவர் உள்ளிட்ட மகான்கள் கண்ட உண்மையைப் பேணி வியந்து பயன்படுத்தியிருக்கின்றார். பேணிப் பயன் செய்த பெருமை கம்பருக்குண்டு.</p>
<p>மூலிகைகளைக் கண்ட சித்தர்கள் பெரியவர்கள். அம்மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்த படியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள்.</p>
<p>அவ்வாறே, திருவள்ளுவரும், சங்கத்துச் சான்றோர்களான புலவர்களும் பெரிய உண்மைகளைக் கண்ட மிகப்பெரியவர்கள். அவ்வுண்மைகளில் ஓரோவொன்றைப்பயன் படுத்துகின்ற கவிச்சக்கரவர்த்திகள் அடுத் படியில் நிற்கும் பெரியவர்கள்.</p>
<p>புலவர்களை அடுத்து கவிச்சக்கரவர்த்திகள்; அவர்களை அடுத்து சாதாரண கவிஞர்கள் இருக்கின்றார்கள். <strong>வள்ளுவர் கண்ட உண்மையைக் கம்பர் கண்டு வியந்து புனைந்தார்.</strong> அந்த ஆற்றல் சாதாரண கவிஞர்களுக்கு இல்லாமல் இருக்கும். ஆனால், தமது அறிவின் எல்லைக்குள் அகப்பட்ட சாதாரணமான கருத்துக்களையும் இயற்கை அழகுகளையும் சனங்களை வசீகரிக்கத்தக்க வகையிற் சொல்லுகின்ற ஒரு சாமர்த்தியம் இவர்களுக்கு இயல்பாகவே உண்டு.</p>
<p>மஞ்சட் குளித்து முகமினுக்கி நல்ல<br />
மாயப் பொடிபூசி நிற்குநிலை<br />
கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ<br />
கண்ணீ ருருக்குமோ ஆரறிவார்.</p>
<p>இது கவிஞர் ஒருவரின் கற்பனா சாமர்த்தியம். சூரியகாந்திப்பூ முகம் மலர்ந்து மஞ்சள் மகரந்தந் தோய்ந்து, சூரியன் செல்லுந் திக்கை நோக்கித் தவம் கிடக்கின்றது. இந்தக் கள்ளத் தவத்தைச் சூரியன் உண்மைக் காதலியாகிய கமலமலர் கண்டாற் சிரிக்குமோ! அழுமோ! ஆரறிவார்!!</p>
<p>வண்ணானில் மொழிகேட்டு வனம்விடுத்த சீதைதனை<br />
இந்நாளுந் தேடுதல்போல் இருங்குரங்கு நெருங்கிடுமே.</p>
<p>இது மற்றொரு கற்பனை. அழகிகள் காட்டு வழியிற் சென்றால் அங்குள்ள குரங்குகள் நெருங்கி எட்டிப்பார்க்கின்றன. வாண்ணான் ஒருவனின் வார்த்தையை நம்பி, இந்த இராமன் சீதையைக் காடுகாட்டின கொடூரம், இன்னுங் குரங்குச் சந்ததிகளை வருத்திக்கொண்டிருக்கின்றது போலும்.</p>
<p>பள்ளு நாடகங்கள், குறவஞ்சிகள், எத்தனையோ வகையான நாட்டுப்பாடல்கள், பரணிகள் என்றிவைகள் சாதாரண கவிஞர்களின் கவிதா சாமர்த்தியங்கள். இவைகள் பெரிய இலட்சிய உண்மைகளைச் சாதியாமல் விட்டாலும், மனிதனுக்கு ஒருவகை களிப்பை ஊட்டி, நல்ல அமைதியான பண்பாட்டை வருவிக்கின்றன; அன்றி அவனை, பெரிய உண்மைகளை கொள்ளுதற்கேற்ற கொள்கலமும் ஆக்குகின்றன. சாதாரண கவிஞர்கள், முற்றத்தை அழகு செய்கின்ற பூந்தோட்டம் போன்றவர்கள். இவர்களும் ஒரு நாட்டின் அழகுச் செல்வங்களே.</p>
<p><strong>கவிஞர்களுக்கு மேலே கவிச்சக்கரவர்த்திகள், அவர்களுக்கு மேலே சான்றோர்களான புலவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை பிளாற்றோ நிந்திக்கவும் இல்லை; நாடுகடத்தவும் இல்லை</strong>. பிளேற்றோ சீறிப்பாய்கின்ற கவிஞர்கள், மேலே காட்டப்பட்ட முத்திறத்தவர்களும் அல்லாதவர்கள். அவர்கள் கவிதை வெறியர்கள். பாடாமல் இருக்கமாட்டாதவர்கள். பாடுகின்ற பைத்தியம் உள்ளவர்கள். பாவம்! அவர்கள் நன்றாகப் பாடலாம். அவர்களை யாருந் தடை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குச் சனநாயக உலகத்தில் பெரிய செல்வாக்கும் இருக்கின்றது. அவர்கள் ஓயாமற் பாடலாம். ஆனால், அவர்கள் தயைகூர்ந்து தம்மறிவின் எல்லையுள் அடங்கி நின்று பாடுதல் வேண்டும்; ஒரு பட்சியைப் பாடலாம்; மரஞ்செடிகளைப் பாடலாம்; காலைமாலைகளை வருணிக்கலாம். கடற்கரை குளக்கரை மற்றும் சோலைகள் மலைகள் யாவற்றையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். பிளேற்றோ தடுக்க மாட்டார். ஆனால் கவிதை வெறியர்கள் அவ்வளவில் அடங்குவார்களா? <strong>தங்கள் தலைக்கு அப்பாற்பட்ட விடயம், தலைக்குள் அடங்கின விடயம் என்ற பேதம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லாம் அபேதமே. </strong>கடவுள், வண்ணத்துப்பூச்சி, காதல், சமயம், தத்துவம், அரசியல் முதலிய எல்லாவற்றையும் அவர்கள் பாடிவிடுவார்கள். பாமர சனங்கள் கூடுமிடம் அவர்களுக்கு கவியரங்கமாயிருக்கும். சனநாயக அரசியலின் வேரை அசைத்து விடுவார்கள் அவர்கள். அதுதான் பிளேற்றோவுக்கு கோபம். ஒரு பொறுப்புள்ள சிறிய உத்தியோகத்தைக் கூட ஒரு நிமிட நேரம் வகிக்க முடியாத கவிதைவெறியர்கள் அரசாங்கத்துக்கு கவிதை பாடுகின்றார்களே. அவர்களை நாடுகடத்தாமல் என்ன செய்வது? என்கின்றார் பிளேற்றோ. பிளேற்றோவில் என்ன குற்றம்?</p>
<p>பாட்டுப் பாடுகின்றவர்கள் இன்னும் ஒரு பகுதியார் இருக்கின்றார்கள். அவர்கள் <strong>கடிய கொடிய வித்துவான்கள்.</strong> அவர்களுடைய கருத்தை பிளேற்றோ மதிப்பார். ஆனாற் கருத்து புலப்படுவதில்லை. <strong>சிறிது நாட்பட்டால், பாடிய அவர்களுக்கே கருத்து கலங்கிப்போகின்றது. இப்படிப்பட்ட பாடல்களை அச்சிட்டு பரப்பாமல் இருப்பது புண்ணியம்.</strong> வித்துவான்கள் தங்கள் கருத்துக்களை வசனநடையிற் சொல்லிவிடலாமே என்று <strong>கவிதா சாமர்த்தியம் வாய்ந்தவரான மகாலிங்கசிவம்</strong> அடிக்கடி சொல்லுவதுண்டு. <strong>கவித்துவம் அற்ற கவிதைகளைக் காணக் கேட்க அவரால் முடிவதில்லை; கூசுவார்.</strong></p>
<p>இப்பொழுது வ<strong>ித்துவத்திறமை, கவித்துவம் இரண்டும் சூனியமான மற்றொரு பகுதியாரும் பாட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுக்குப் பணப்பஞ்சத்திலும் சொற்பஞ்சம் மகாமோசம்.</strong></p>
<p><strong>பச்சைக்குழந்தைகளின் செவியையும் நாவையும் அந்த சொற்பஞ்ச பாடல்கள் &#8211; ஓசை கெட்ட பாடல்கள் &#8211; கெடுத்தே விடும்.</strong> சொல்லுஞ் சொல்லும் பொருந்தும் பொருத்து, பாலும் பாலும் பொருந்தும் பொருத்தாயிருக்க வேண்டும். ஓசையைப் பாட்டிற் கட்டக்கூடாது. பாட்டிலிருந்து ஓசை வரவேண்டும். “இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்” என்ற திருப்புகழை எடுத்துப்பார்க்க மேற்காட்டிய இரண்டும் புலனாகும். இரண்டுங்கெட்ட பாடல்களைப் பாடாமலிருக்க வேண்டுமென்று அரசாங்கம் கடுஞ்சட்டம் விதிக்க வேண்டும்.</p>
<p>ஆறு பகுதியான பாட்டுக்காரர்கள் இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கின்றார்கள். ஆறாவது பகுதியினர் வெகு மோசமானவர்கள். ஐந்தாவது பகுதியினர் கவித்துவம் இல்லாதவர்கள். நாலவது பகுதியினர் மகாவித்துவ சாமர்த்தியம் உள்ளவர்கள்; ஆனால் நாட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள். மற்றையோர் படிப்படியே உயர்ந்தவர்கள். சங்கத்துச் சான்றோர்கள் “பொய்யடிமையில்லாத புலவர்கள்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாராட்டப்பட்டிருக்கின்றார்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d.html#comments</comments>
		<pubDate>Sun, 03 Jun 2007 16:47:00 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[நற்சிந்தனை]]></category>
		<category><![CDATA[நூல்கள்]]></category>
		<category><![CDATA[யோகர் சுவாமி]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2007/06/03/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d/</guid>
		<description><![CDATA[யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டுஉய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டுபொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டுஐயன் அடியிணை அன்பர்க் குண்டே
கல்லா தார்பாற் கபட முண்டுஎல்லா ரிடத்து மீச னுண்டுவில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டுஎல்லாச் சக்தியும் இறைபால் உண்டே
தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டுதேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டுநாடுவார் மாட்டு நன்மை உண்டுபாடுவார் மாட்டுப் பரமன் உண்டே
சீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டுஆவதும் அழிவதும் அசடர்க் குண்டுஈவது விலக்கார்க் கெல்லா முண்டுதேவ தேவன் திருவடி உண்டே
அன்பு ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.</p>
<p>தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு<br />உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு<br />பொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டு<br />ஐயன் அடியிணை அன்பர்க் குண்டே</p>
<p>கல்லா தார்பாற் கபட முண்டு<br />எல்லா ரிடத்து மீச னுண்டு<br />வில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டு<br />எல்லாச் சக்தியும் இறைபால் உண்டே</p>
<p>தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டு<br />தேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டு<br />நாடுவார் மாட்டு நன்மை உண்டு<br />பாடுவார் மாட்டுப் பரமன் உண்டே</p>
<p>சீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டு<br />ஆவதும் அழிவதும் அசடர்க் குண்டு<br />ஈவது விலக்கார்க் கெல்லா முண்டு<br />தேவ தேவன் திருவடி உண்டே</p>
<p>அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு<br />பொன்புரை மேனி புனிதர்க் குண்டு<br />தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு<br />விண்போல் விரிவு மேலோர்க் குண்டே</p>
<p><span style="font-style:italic;">வீத்தொழில் &#8211; கொல்லுந்தொழில்</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d.html/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத்து இலக்கிய வழி</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf.html</link>
		<comments>http://oorodi.com/literature/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf.html#comments</comments>
		<pubDate>Sun, 10 Dec 2006 03:39:00 +0000</pubDate>
		<dc:creator>பகீ</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[நூல் வாசிப்பு]]></category>
		<category><![CDATA[ஈழத்து இலக்கிய வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[ஈழத்து இலக்கிய வழி]]></category>
		<category><![CDATA[சி. கணபதிப்பிள்ளை]]></category>
		<category><![CDATA[பண்டிதமணி]]></category>

		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/12/10/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.
தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு ...]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.</p></blockquote>
<p>தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன. </p>
<p>நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும் <br />கூறுவர். </p>
<p>இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார். </p>
<p>இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.</p>
<p>வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.</p>
<p>அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.</p>
<p>அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரைய</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://oorodi.com/literature/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf.html/feed</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
	</channel>
</rss>

