Category: ஊரோடி
வலைப்பதிவர் சந்திப்பு – 2 1 comment

தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.

கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. கலந்துரையாடல்களுக்கான அறிமுக உரைகள் சிறியதாய் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது.

லோசன் அண்ணா – ஒரு உதாரணத்திற்காகத்தான் உங்கள் பதிவினை கிரிக்கெட் பதிவாக குறிப்பிட்டேன், உங்கள் பதிவை பற்றி நான் சொல்லித்தான் மற்றவர்கள் அறியவேண்டும் என்பது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதே போல வந்தியத்தேவன் உங்கள் பதிவில் தான் நான் அனேகம் பின்னூட்டங்களை வாசிக்க நேரத்தை செலவழிப்பதுண்டு. அதன் அர்த்தம் பதிவு நன்றாக இருக்காது என்பதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கீர்த்தி உங்கள் பேச்சைப்போலவே பயற்றம் பணியாரமும் நன்றாக இருந்தது. நன்றிகள்.

கீழே சில புகைப்படங்கள்..

DSC00112
DSC00119
DSC00113
DSC00114
DSC00115
DSC00116
DSC00117

Read More..
தீபாவளி வாழ்த்துக்கள் 2 comments

தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் ஊரோடியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

DiwaliLight

அன்புடன்
ஊரோடி பகீ.

Read More..
மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற.. 10 comments

கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.

logo

ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் எங்கள் மீது இற்க்கிவிடும் அவர்களின் துயரங்களினையும் துக்கங்களினையும் தாங்கவேண்டடியவர்களாயும் இந்த நான்குமாதங்களும் கடந்து போயிருக்கிறது. இன்னமும் இது தொடர்ந்தாலும், பழகிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. (எங்களுக்கு எல்லாமே பழகிப்போயிருக்கிறது)

இப்போது ஊரோடியில் திரும்பவும் ஏதாவது அலட்டுவது என்று முடிவுடன் திரும்பி வந்திருக்கின்றேன். நிச்சயமாக கடந்து போன மாதங்கள் பற்றியதாக அது இருக்காது. எப்போதாவது சாத்தியப்படும் என்ற நிலை வரும்போது அவைபற்றி நிச்சயம் எழுதுவேன்.

பதிவர் சந்திப்புக்காய் ஏ-9 வீதியால் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை நிச்சயம் ஒரு நாள் தரவேற்றுவது என்ற யோசனையும் இருக்கின்றது. பாரப்போம். இடையிலே தடைப்பட்டிருந்த எனது இணையத்தூடான வேலையையும் இப்போது தொடரத்தொடங்கியிருக்கின்றேன். இப்போது மீளவும் அதிகம் வாசிக்க முடிகிறது. நல்ல புத்தகங்கள் கிடைப்பதுதான் அரிதாகி இருக்கிறது. (நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் – யாழ்ப்பாணத்தில் கிடைக்கவும் வேண்டும்.) பார்ப்போம்.

யாழ்ப்பாணம்.

பொருட்களின் விலை குறைந்திருக்கிறது, யாழப்பாண உற்பத்திகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதிவேக இணையம் வந்திருக்கிறது அத்தோடு வீதிக்கு வீதி நெற்கவேக்களுமாக. யாழ்ப்பாணத்துக்குள் அதிகம் இறக்குமதியாவது மதுபானம்தான் – அரச அதிபரின் கூற்று. தேர்தல் ஒன்று வந்துபோயிருக்கிறது யாருக்கும் தெரியாமல். யாழ்ப்பாணத்தை பற்றி தொடர்ந்து அதிகம் அலட்ட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஊரோடி.

Read More..
தொழிலாளர் தின வாழ்த்துக்கள். 4 comments

ஊரோடி வாசகர்கள், தமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் மனங்கனிந்த தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

Read More..
ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள் 9 comments

தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊரோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

new year

Read More..
Next Page »