கந்தபுராணத்தில் ஒரு பாடல்

இந்ததிருப்பாடல் கந்தபுராணத்தில் தேவகாண்டத்தில் தெய்வயானையம்மை திருமண படலத்தில் வருகின்றது. முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆறுமுகப்பெருமானின் திருமணத்திற்கு செல்லும்போது நடக்கின்ற காட்சிகளில் ஒரு பாடலாய் நிற்கின்றது. கந்த புராணம் இப்பிடி இருக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா ஏன் நம்ம பையன்கள் எல்லாம் கந்தபுராணம் படிக்காம போகப்போறாங்க?

காமரு கொங்கையாற் கரிம ருப்பினை
ஏமுற வென்றுளார் யானைக் கோடுகள்
மாமருங் கடைதலும் மருண்டங் கோடினார்
தாமுதற் செய்வினை தம்மைச் சூழ்ந்தென.

ஆண்யானையின் கொம்பு, பெண்யானையை அதன் மேல் மையல் கொள்ளும்படி வைக்கும் எழில் கொண்டது. அதன் பரிசத்தால் தான் பெண்யானை தன்னையறியாது ஆண்யானைமீது மருவிட உருக்கம் கொள்ளும். இதேபோன்று பெண்களுடைய தனங்களும் யானைக்கொம்பர்போல் நீண்டு பருத்திருந்தபோது அதன் எழிலைக்கண்டு ஆண்கள் அப்பெண்கள் மீது பெரும் மையல் கொள்வர். இந்த நிகழ்ச்சியால் அப்பெண்கள் ஆண்களுக்கு இடரே வருவிப்பர். இச்செயலில் யானைக்கொம்பைவிட பெண்கள் தங்கள் தனங்களால் வெற்றிகாண்பது எளிது. ஆதலின் தன் தனத்தால் ஆசையூட்டி ஆடவரை அலைத்திட வைத்த பெண்கள், அதே தன்மையை புரிந்த ஆண்யானைக் கொம்பைக்கண்டு அஞ்சி ஓடினர். இது பிறர்க்குச் செய்த வினை தன்னைச் சூழ்வது போன்றது.

குறிச்சொற்கள்: ,

14 பின்னூட்டங்கள்

  1. SK சொல்லுகின்றார்: - reply

    இதற்காகவாவது கந்தபுராணம் படிக்கத் தூண்டும் உங்கள் பக்தி ரசனைக்கு வாழ்த்துகள்!

  2. SK சொல்லுகின்றார்: - reply

    இதற்காகவாவது கந்தபுராணம் படிக்கத் தூண்டும் உங்கள் பக்தி ரசனைக்கு வாழ்த்துகள்!

  3. G.Ragavan சொல்லுகின்றார்: - reply

    கந்தபுராணம் நான் ஆங்காங்கு படித்ததோடு சரி…

    திகட சக்கரச் செம்முகம் பாடலும்

    தீயவை புரிந்தாரேனும் பாடலும்

    துயில ஓருருவம் துஞ்சி என்ற பாடலும்

    ஏலவார் குழல் இறைவிக்கும் பாடலும்

    கோலமா மஞ்ஞை தன்னில் பாடலும் மட்டுமே தெரியும். இன்னும் ஆழ வேண்டும். அந்த ஆவலைத் தூண்டுகிறது உங்களது இந்தப் பதிவு.

    எஸ்.கேயின் இனிய திருப்புகழ் பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை.

  4. johan-paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    பண்டைய இலக்கியங்களில்..;இப்படியான வர்ணனைகள் மலிந்திருக்கும்; அது பக்தி இலக்கியமானாலும்.;;”மணி வாசகர் கூறுகிறார். “ஈர்கிடை போகா இளமுலை மாதர் தம்; கூர்த்தன நயனக் கொள்கையில் பட்டு….இதைவிடவா???அன்று இச்சொற்களோ வர்ணனைகளோ!!!வித்யாசமான கண்கொண்டு பார்க்கப் படவில்லை.
    அதுவே “கம்பரசம்” உருவாகக் காரணமானது.”சிவலிங்கம்” என்பது என்ன???,
    எனினும்….எஸ் கே அண்ணா!!நினைப்பது போலன்றி….இதன் எழில் கருதியே!!நீங்கள் படிக்கிறீர்கள்..;என்பதனை தங்கள் ஏனைய பதிவுகள் மூலம் நான் அறிவேன். உங்கள் வயதில் உங்கள் தேடுதலை நான் மிக வரவேற்கிறேன்.
    நேரம் கிடைக்கும் போது எஸ் கே அண்ணாவின் “திருப்புகழ் “ஆய்வு படிக்கவும்.
    யோகன் பாரிஸ்

  5. G.Ragavan சொல்லுகின்றார்: - reply

    கந்தபுராணம் நான் ஆங்காங்கு படித்ததோடு சரி…

    திகட சக்கரச் செம்முகம் பாடலும்

    தீயவை புரிந்தாரேனும் பாடலும்

    துயில ஓருருவம் துஞ்சி என்ற பாடலும்

    ஏலவார் குழல் இறைவிக்கும் பாடலும்

    கோலமா மஞ்ஞை தன்னில் பாடலும் மட்டுமே தெரியும். இன்னும் ஆழ வேண்டும். அந்த ஆவலைத் தூண்டுகிறது உங்களது இந்தப் பதிவு.

    எஸ்.கேயின் இனிய திருப்புகழ் பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை.

  6. johan-paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    பண்டைய இலக்கியங்களில்..;இப்படியான வர்ணனைகள் மலிந்திருக்கும்; அது பக்தி இலக்கியமானாலும்.;;”மணி வாசகர் கூறுகிறார். “ஈர்கிடை போகா இளமுலை மாதர் தம்; கூர்த்தன நயனக் கொள்கையில் பட்டு….இதைவிடவா???அன்று இச்சொற்களோ வர்ணனைகளோ!!!வித்யாசமான கண்கொண்டு பார்க்கப் படவில்லை.
    அதுவே “கம்பரசம்” உருவாகக் காரணமானது.”சிவலிங்கம்” என்பது என்ன???,
    எனினும்….எஸ் கே அண்ணா!!நினைப்பது போலன்றி….இதன் எழில் கருதியே!!நீங்கள் படிக்கிறீர்கள்..;என்பதனை தங்கள் ஏனைய பதிவுகள் மூலம் நான் அறிவேன். உங்கள் வயதில் உங்கள் தேடுதலை நான் மிக வரவேற்கிறேன்.
    நேரம் கிடைக்கும் போது எஸ் கே அண்ணாவின் “திருப்புகழ் “ஆய்வு படிக்கவும்.
    யோகன் பாரிஸ்

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    எஸ் கே ஐயா நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். உண்மையில் இந்த பாடலினினை நான் பதிந்ததன் காரணம் இன்று இளைய தலைமுறையினரிடம் காணமல் போகும் வாசிப்பும் பண்டை இலக்கியம் எங்கள் தனித்துவமான மொழிமீதான தாக்கமும் குறைந்து வருகின்றமை நோக்கியே. எப்படியாவது ஓரிருவரையாவது அவற்றின் மீது திசைதிருப்பி விட முடியுமா என்றே முயற்சிக்கிறேன். இல்லை என்று சொன்னாலும் ஆம் என்று சொன்னாலும் இளைஞர்கள் எதனை விரும்பிப்படிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று நம்புகின்றேன். இந்த பின்னூட்டத்தில் நீங்கள் என்னை கடிகின்றீர்களா அல்லது ஏதாவது செய்து தொலை என்கிறீர்களா என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும் என்சார்பான விளக்கமே. தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
    நன்றி.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    எஸ் கே ஐயா நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். உண்மையில் இந்த பாடலினினை நான் பதிந்ததன் காரணம் இன்று இளைய தலைமுறையினரிடம் காணமல் போகும் வாசிப்பும் பண்டை இலக்கியம் எங்கள் தனித்துவமான மொழிமீதான தாக்கமும் குறைந்து வருகின்றமை நோக்கியே. எப்படியாவது ஓரிருவரையாவது அவற்றின் மீது திசைதிருப்பி விட முடியுமா என்றே முயற்சிக்கிறேன். இல்லை என்று சொன்னாலும் ஆம் என்று சொன்னாலும் இளைஞர்கள் எதனை விரும்பிப்படிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று நம்புகின்றேன். இந்த பின்னூட்டத்தில் நீங்கள் என்னை கடிகின்றீர்களா அல்லது ஏதாவது செய்து தொலை என்கிறீர்களா என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும் என்சார்பான விளக்கமே. தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
    நன்றி.

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    ராகவன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. யோகன் அண்ணா உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையே. உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு நிச்சயம் வழிகாட்டியே. நான் என் வாசிப்புகளை ஆழமாக்கியபோது வாசிப்பு வட்டத்தை குறைக்க வேண்டி வந்தது. அது வந்து நின்ற இடம் பண்டை இலக்கியங்களும் ஆன்மீகம் சார் இலக்கியங்களுமே. நான் கந்தபுராணத்தின் வாசகனே தவர வித்தகன் அல்ல. எஸ் கே ஐயாவின் பதிவுகளை ஏலவே சுவைத்துக்கொண்டிருப்பவன் நான்.

  10. பகீ சொல்லுகின்றார்: - reply

    ராகவன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. யோகன் அண்ணா உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையே. உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு நிச்சயம் வழிகாட்டியே. நான் என் வாசிப்புகளை ஆழமாக்கியபோது வாசிப்பு வட்டத்தை குறைக்க வேண்டி வந்தது. அது வந்து நின்ற இடம் பண்டை இலக்கியங்களும் ஆன்மீகம் சார் இலக்கியங்களுமே. நான் கந்தபுராணத்தின் வாசகனே தவர வித்தகன் அல்ல. எஸ் கே ஐயாவின் பதிவுகளை ஏலவே சுவைத்துக்கொண்டிருப்பவன் நான்.

  11. SK சொல்லுகின்றார்: - reply

    மனமார பாராட்டுமுகமாகவே சொன்னேன், திரு. பகீ!

    கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார், “படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன; போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன?
    குளிர் போவணும்; அவ்வளவுதான் ” என்று. [அவர் சொன்னது வேறு; ஆனால் அதுவும் இதே பொருளில் வரும்!:))]

    அது போல, எப்படியோ, கந்தபுராணம் படிக்கத் தூண்டும் இம்முயற்சியினைப் பாராட்டியே சொன்னேன்!

  12. SK சொல்லுகின்றார்: - reply

    மனமார பாராட்டுமுகமாகவே சொன்னேன், திரு. பகீ!

    கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார், “படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன; போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன?
    குளிர் போவணும்; அவ்வளவுதான் ” என்று. [அவர் சொன்னது வேறு; ஆனால் அதுவும் இதே பொருளில் வரும்!:))]

    அது போல, எப்படியோ, கந்தபுராணம் படிக்கத் தூண்டும் இம்முயற்சியினைப் பாராட்டியே சொன்னேன்!

  13. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி ஐயா உண்மையில் பயந்து விட்டீடன்.

  14. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி ஐயா உண்மையில் பயந்து விட்டீடன்.