ஊரோடி

வலைப்பதிவில் ஒரு வருடம்

“ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.”

இது சரியா ஒரு வருசத்துக்கு முதல் இந்த வலைப்பதிவை ெதாடங்கேக்க நான் எழுதினது.

ெபரிய சாதனை எண்டு ெசால்லுறதுக்கு ஒண்டும் இல்லை, இருந்தாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இருந்த இைணய வசதி பல ேநரங்களில என்னை இந்த வலைப்பதிவை விட்டு ேபாகத்தூண்டி இருக்குது.

பிறகு இப்ப நன்றி ெசால்லுற ேநரம். முதலில இந்த வலைப்பதிவிற்கு என்னை வரப்பண்ணின சயந்தன். பிறகு பின்னூட்டங்களால ஊக்கம் அளிச்ச ேயாகன் அண்ணா. ெபயர் ெசால்ல ெவளிக்கிட்டா எல்லாற்றையும் ெசால்லோணும். அைதவிட ெபாதுவா புலம் ெபயர்ந்த ஈழத்து பதிவர்கள் எண்டு ெசான்னா சுகம். அைதவிட எல்லா பதிவர்களுமே ஒரு விதத்தில உற்சாகம் ஊட்டினார்கள் என்றுதான் ெசால்ல ேவணும். ேவற என்ன ஒரு வருசத்தில இரண்டு தரம் அைடப்பலகை மாத்தினான். நீங்களும் பாருங்கோ.





சில கணக்குகளை பாருங்க. வந்து ேபானாக்கள் பற்றி.




பிறகு ெகாஞ்ச காசும் உைழச்சனான். அைதயும்பாருங்க.



ேவறென்ன வந்தனீங்க ஒரு பின்னூட்டத்தை ேபாட்டுட்டு ேபாங்க.

30 புரட்டாதி, 2007

நானும் கணினியும்

நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் செலவாக தொடங்கியது. 2003 இல் (பாடசாலையின் இறுதிக்காலம்) நான் வாங்கிய மேசைக்கணினியுடன் (வின்டோஸ் எக்பி இயங்குதளத்துடன்) பகுதிநேர தொழிலாக கூட அது மாற்றமடைந்தது.

அத்தோடு எனது நோண்டிப்பார்த்தல் என்கின்ற விடயமும் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக கிராஸ் ஆகின்ற இயங்குதளம் என்கின்ற வகையிலேயே என்னால் வின்டோஸ் எக்பி பதிப்பினை அடையாளப்படுத்த முடிந்ததால் வேறு வேறு இயங்கு தளங்களை பரிசோதிக்க ஆரம்பித்தேன். முதலில் 2004 இன் இறுதியில் என்று நினைக்கின்றேன், மான்ரேக் லினிக்ஸினை (மான்ரேவ் என் பெயர் மாற்றப்பட முன்னர், அனேகமாக பதிப்பு 9 அக இருக்க வேண்டும்) பரிசோதிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாளர் இலகுத்தன்மையை கணிப்பதற்காக எனது நண்பர்கள் அனைவரினையும் அதனை நிறுவுமாறு கேட்டுக்கொண்டதோடு சிலரின் கணினியில் நானே நிறுவிவிடும் வேலையையும் பார்த்துக்கொண்டேன். (இதனால் நண்பர்களின் பிரத்தியேக கோப்புகள் பல அழிந்து போனதெல்லாம் வேறு விடயம்).

அப்போதய எனது கணினி அறிவு குறைவாயும் எனது கணினியின் தேவைகள் மான்ரேக் தருவதைவிட அதிகமாகவும் இருந்ததனால் அதனை விட்டு மீண்டும் வின்டோஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இருந்தாலும் தமிழில இருந்த பின்னர் டேபியன் லின்டோஸ் (அப்போது லின்டோஸ், பிறகு தான் “லின்ஸ்பயர்” பெயர் மாத்தினவங்கள்) என்று தொடர்ந்த எனது நோண்டிப்பார்த்தால் உபுந்துவில வந்து நிக்கக்க 2007 தொடங்கீற்றுது.



இடையில நாட்டுப்பிரச்சனைகளால கொம்பியூட்டருக்கு கிட்டயே போகேலாமல் போன காலமும் உண்டு. என்னோட தேவைகளுக்கு உபுந்து போதுமானதா இருந்ததோட என்னால அதற்குரிய மென்பொருள்களையும் எடுத்துக்கொள்ளக் கூடியதா இருந்துது. ஆனா என்ர போதாத காலம் எண்டு அந்த நேரம் பாத்து விஸ்ரா வெளிவந்துது. ஏன் விடுவான் எண்டு அதை எடுத்து உடனேயே நிறுவினா திருப்பியும் பிடிச்சுது சனி. ஏகப்பட்ட கிராஸ் அத்தோட பழைய மென்பொருட்களோட அது காட்டின ஒத்திசைவு, முக்கியமா மென்பொருட்களின்ர உதவிப்பக்கங்களை பாக்கிறது எல்லாத்திலயும் பிரச்சனைதான். கணினிய மூடுறதுக்கு எடுக்கிற நேரத்தில வேற வேலையே பாக்கலாம் போல இருந்துது.

கடைசியா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு முக்கியமா வின்டோசை விட்டுட்டு முதன்முறையா ஒரு மக்புக்(Macbook) வாங்கிட்டன். கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. அதோட நானும் அதுக்கு பழக்கமாகிட்டன். (அலுவலக கணினியில கூட றைற் கிளிக் பண்ண ctrl பொத்தானை அழுத்திறன் எண்டா பாருங்கோவன். அது வின்டோஸ்). என்ர நண்பர் ஒருவர் கொழும்பில இருந்து தேவையான மென்பொருட்களை தரவிறக்கி அனுப்பியிருந்தார். இப்பதான் முதல்முதலா ஒரு பிரச்சனையில்லாத இயங்குதளத்தை பாவிக்கிறன் எண்ட எண்ணம் வந்திருக்குது. இதைப்பாத்திட்டு என்ர நண்பர்கள் சில பேரும் மக் இற்கு மாறுவமோ எண்டு யோசிக்கினம். வருகிற ஐப்பசியில சிறுத்தை உறுமும் எண்டு அப்பிள் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இப்பவே போதும் எண்டு இருக்கு. அதுவும் வரட்டும் பாப்பம்.

9 ஆவணி, 2007

ஊரோடி சொந்த வீட்டில்

இவ்வளவு காலமும் வாடகை வீட்டில இருந்த ஊரோடி இப்ப சொந்த வீட்டுக்கு வந்திருக்கு. இணையத்தளங்களோட நீண்ட கால பரிட்சயம் இருந்து வந்தாலும், ஏனோ ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.

திடீரெண்டு ரவிசங்கரோட பதிவொன்ற பாத்த பிறகு (எந்த பதிவெண்டு மறந்துபோனன். எப்பிடி என்ர ஞாபக சக்தி??) சொந்த வீட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வந்து மூண்டு நாளையில http://oorodi.blogspot.com, http://www.oorodi.com ஆக வந்திருக்கு. அத்தோட ரவிசங்கரோட பதிவில இருந்த மயூரன்ரை (அவற்றதானே??) ஐடியாவை பாவிச்சு புளொக்கரை இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸில இம்போட் பண்ணி பிறகு அதை எக்ஸ்போட் பண்ணி இந்த வேர்ட் பிரஸில எல்லா பதிவுகளையும் கொண்டுவந்திருக்கிறன். (இரண்டு பேருக்கும் நன்றி).

இப்பிடி இருந்த நான்

இப்பிடி ஆகிட்டேன்.

பிறகென்ன எப்பிடி இருக்கெண்டு ஒரு பின்னூட்டத்தை போட்டுவிடுங்கோ.

30 ஆனி, 2007