“ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.”
இது சரியா ஒரு வருசத்துக்கு முதல் இந்த வலைப்பதிவை ெதாடங்கேக்க நான் எழுதினது.
ெபரிய சாதனை எண்டு ெசால்லுறதுக்கு ஒண்டும் இல்லை, இருந்தாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இருந்த இைணய வசதி பல ேநரங்களில என்னை இந்த வலைப்பதிவை விட்டு ேபாகத்தூண்டி இருக்குது.
பிறகு இப்ப நன்றி ெசால்லுற ேநரம். முதலில இந்த வலைப்பதிவிற்கு என்னை வரப்பண்ணின சயந்தன். பிறகு பின்னூட்டங்களால ஊக்கம் அளிச்ச ேயாகன் அண்ணா. ெபயர் ெசால்ல ெவளிக்கிட்டா எல்லாற்றையும் ெசால்லோணும். அைதவிட ெபாதுவா புலம் ெபயர்ந்த ஈழத்து பதிவர்கள் எண்டு ெசான்னா சுகம். அைதவிட எல்லா பதிவர்களுமே ஒரு விதத்தில உற்சாகம் ஊட்டினார்கள் என்றுதான் ெசால்ல ேவணும். ேவற என்ன ஒரு வருசத்தில இரண்டு தரம் அைடப்பலகை மாத்தினான். நீங்களும் பாருங்கோ.



சில கணக்குகளை பாருங்க. வந்து ேபானாக்கள் பற்றி.


பிறகு ெகாஞ்ச காசும் உைழச்சனான். அைதயும்பாருங்க.

ேவறென்ன வந்தனீங்க ஒரு பின்னூட்டத்தை ேபாட்டுட்டு ேபாங்க.
இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் இன்று தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரை உற்றார் உறவினர் மற்றும் ஊரோடி என்போர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.
கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே.
கூகிள் 1998 இல்

அப்புறமா


வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.
கூகிள் நிறுவனம் தவறுதலாக தனது கூகிள் றீடர் சம்பந்தமான சில தகவல்களை கூகிள் வீடியோவில் வெளியிட்டுவிட்டது. பொதுவாகவே கூகிள் தனது உள்விடயங்கள் வெளியிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த தகவல்கள் உங்களுக்காக.
- Google Reader uses 10 TB for storing all the raw data
- Google Reader crawls 8 million feeds
- The rate of user growth = the rate of growth for the number of feeds
- Search requires a lot of computational resources. Google Reader uses two indexes for search: a big tree updated twice a day (150 machines, 600 million documents) and 40 small trees for recent posts, updated every 5 minutes (40 machines, 40 million documents)
- Some upcoming features are also mentioned in the video: internationalization, feed recommendations, and accepting pings sent to Google Blog Search
