கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் நமது மெய்யடியார்கள். அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும் பல பல பாங்குகளில் வைத்துக்காட்டுகின்றன நமது அருள் நூல்கள். திருமுறைகளத்தனையும் இறைவனிடத்திலிருந்து மெய்யடியார்கள் அடைந்த அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன. திருமுறைகளுள்ளும் திருவாசகம் ஒரு தனிச்சிற்ப்பு வாய்ந்தது. மணிவாசகப்பெருமான் ஆண்டான் அடிமைத் தொடர்பின் நெருக்கத்தைக் காட்டி அழுது அழுது எம்பெருமானிடம் அருள்பெற்று உய்ந்தவராவார்.
உலகத்திலே அறிவுடைப்பொருட்களை நோக்கும்போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் ...
மேலும் வாசிக்க →
தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் பகுதி ஒன்றிலிருந்துதொடர்கிறது.
மதுரைத் தமிழச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராசிரியர் இராமானுஜையங்கார் அவர்கள், "சென்னை நார்மல்ஸ் ஸ்கூல் தலைமைத் தமிழ்ப் புலவர் கோமளபுரம் இராசகோபாலபிள்ளையால் பரிசோதித்து, மு. கந்தசாமி முதலியார் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது" என்ற முகப்புடன் ஒரு சேனாவரையம் தம்மிடம் இருக்கின்றது என்று தெரிவிக்கின்றார்கள். அந்த இராசகோபாலப்பிள்ளை பதிப்பு "எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்று கேட்டபோது, (1868) விபவ ௵ கார்த்திகை ௴ என்று அம்முகப்பில்தானே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். இராசகோபாலப்பிள்ளை ...
மேலும் வாசிக்க →
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - ஈழகேசரி: ஞாயிறு, 17-09-1950
இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னே, 1847ம் ஆண்டு பிலவங்க ௵ ஆவணி ௴ முதன் முதல் மழைவை மகாலிங்கையர் அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிற் பதிப்பித்தார்கள். பன்னீராயிர வருச காலம் கற்றோர் மனதிலும் ஏட்டுச் சுவடிகளிலும் இருந்து வந்த தொல்காப்பிய மூலத்்தில் எழுத்ததிகாரமும், பலநூறு வருசங்களாக அவ்வாறு இருந்து வந்த நச்சினார்க்கினியர் உரையும் அச்சுவாகனமேறின.
அந்த மகாலிங்கையர் அவர்கள் தாம், ...
மேலும் வாசிக்க →
நான் யார்? என்ற வினா உலகந்தொடங்கிய காலந்தொடங்கி இருந்து வருகின்றது. அதற்கு விடைகாணும் முயற்சியும் நடந்து வருகின்றது.
நான் யார் என்ற வினாவுக்கு எளிதில் விடைகண்டு சொன்னவன் உலகாயதன். இந்த உடம்புதான் நான் என்று தீரமானஞ் செய்தவன் அவன். நான்யார்? என்கின்ற வினாவுக்கு அரிதின் முயன்று வேத உபநிடதங்களினை ஆராய்ந்து விடைகண்டு சொன்னவன் வேதாந்தி.
காணப்பட்ட இந்த உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதற்குத் தாரகமாய், அதனோடு அத்துவிதப்பட்டு நின்றது எதுவோ அதுவே ...
மேலும் வாசிக்க →
இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை இட்டிருந்தார். அதில் அவர்,
counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
* -er ...
மேலும் வாசிக்க →