யாழ்ப்பாணம்

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம்.

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு இலங்கை நிறுவனத்தின் ஒழுங்கு படுத்தலில் பல்வேறு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் இந்நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு களைகட்டியிருந்தது. பல்வேறு சமய மற்றும் சமூகப்பெரியார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு யாழ் அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆசியுரை வழங்கும் நல்லை ஆதீன ...

மேலும் வாசிக்க →

இந்துக்களின் யுத்தம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும் விபரங்களுக்கு Score card க்கு

மேலும் வாசிக்க →

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

மேலும் வாசிக்க →

யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி… புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு ...

மேலும் வாசிக்க →

உரிமைகள், ஆவணங்கள் உங்களால் உதவ முடியுமா???

இன்றைய யாழ்ப்பாண சூழலிலும் பல்வேறு இளைஞர்களும் யுவதிகளும் மனித உரிமை கல்வி மற்றும் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்த போதிலும் போதுமான குறிப்பேடுகள், ஆவணங்கள் உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் என்பவற்றை பெறுவதில் மிகுந்த சிரம நிலை உள்ளது. உங்களில் யாராவது உங்கள் நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளை வைத்திருந்தால் (ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில்) அவர்களுக்கு உதவும் முகமாக அவற்றை எனக்கு ...

மேலும் வாசிக்க →