Posts Tagged "உமாஜிப்ரான்"

இன்றைய தமிழ்க் கவிதைகள்.

மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன. கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்). மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற ...

மேலும் வாசிக்க →

ஐந்து கவிதைகள் – உமாஜிப்ரான்

வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.சுகம்பல்லரும்பா மழலைவாய்குதப்பும் கைவிரல்முரசழுந்தும் குறுகுறுப்புகாதல் கவ்விக் குதப்பும் மனங்களில்உள்ளொளிதெளிந்த ஆழ் சுனைமனதில்அலைகிளா அமிழ்ந்தாய்அதிர்வுசூழ் கவிதையெனஉன் சிறுசலனமும்குமிழ் பெருக்கசுனைமனது நுரைபூக்கும்கவிதை கவிதையாய்.காமம்1பாத்தியில் விழுந்து தெறிக்காது தவழ்ந்துவடிந்தடங்கும் பக்குவமாய்.2தறிகெட்டு பாய்ந்துபாத்திமேவிபரவி வடிந்துதேங்கி நாறும் சகதியாய்காதல் வனைந்த வாழ்வுமடியும் கன்றின் மூக்குமாய்முட்டி முட்டிஉனதும் எனதும்பார்வைகள் உமிந்தனஎன்னையும் உன்னையும்மிச்சமில்லாமல் கரைந்துமிச்சமில்லாமல் நிறைந்து போனோம்சருமத் துவாரங்களில் காதல்வழியவெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்உன் மனதில்நிலவில் ஒளவையெனநித்தியம் ...

மேலும் வாசிக்க →

உமா ஜிப்ரான்

தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத பெயரென்றாலும் அழகான ஆக்ரோசமான பல கவிதைவரிகளுக்கு சொந்தக்காரர். ஈழத்திலிருப்பதை பெருமையாய் சொல்லும் வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது கவிதை ஒன்றை பாருங்கள். இது இம்சை எனும் பெயரில் காலச்சுவடு 19 வது இதழில் வெளிவந்தது.ஆண்மை தெறிக்கும் தேகம்விழுங்கும் முனைப்பில்அலைந்து மேயும் விழிகளில்இரைதேடும்பசித்த புலியின் குரூர வசீகரம்உரையாடலின் நடுவேஅடிக்கடி நெருப்பை உமிழும் நெடுமூச்சுஅலையென எழுந்து தாழும் மார்பைவிழிகள் தெறிக்க.............................. தொடந்து செல்கிறது கவிதை.நீண்ட நாட்களாகவே இவரை ...

மேலும் வாசிக்க →