நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங் கற்பங் கடக்குங் கதிரையே – வெற்பரிந்தோன்தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்தமாவியா கத்தன் மலை (18)
வெற்பு அரிந்தோன் – மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த – மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை – பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் – நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே – தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது …
கதிரைச் சிலேடை வெண்பா 17-20
கதிரைச் சிலேடை வெண்பா 16,17
பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.
சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்கற்பு மலருங் கதிரையே – வெற்புடனேமாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச மாமூல வேரறுப்பான் வைப்பு (16)
வெற்புடனே – மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து – அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த – தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் – உயிர்களது வஞ்சனை மிக்க இருண்மலத்தின் மூலமாகிய …
கதிரைச் சிலேடை வெண்பா 11-15
மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்கைக்குறி பார்க்குங் கதிரையே – கைக்குங்கடமலையு மையற் கடமு மழித்துப்படமலையு மையன் பதி. (11)
அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்கஞ்சனை கடுக்குங் கதிரையே – விஞ்சுபலமாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமுபாயத்தா னாடற் பதி. (12)
வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டிகண்ணி வளைக்குங் கதிரையே – நண்ணுங் (னிலுங்)கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)
இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்கந்துகத்தே ரோட்டுங் கதிரையே – முந்தும்பாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்பாவமா வினையடித்தான் பற்று. (14)
மன்னுகா …
கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழுங்காய்கதிரைக் காட்டு்ங் கதிரையே – மேயசடைஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்ஆறா னனத்த னகம் (6)
விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்கற்கண்டங் கூறுங் கதிரையே – அற்பார் மொழியிற்உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்அறுவர்பய முண்டா னகம் (7)
வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்காசிலன முண்ணுங் கதிரையே – மோசக்கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்திருவிளையாட் டம்மான் சிலம்பு (8)
அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்கற்பூர மேவுங் கதிரையே – பொற்பூருமஞ்சத்தான் றோற்று மறுகவரு வானடியேமஞ்சத்தான் றோற்று மரண். (9)
மேயகொடி மாளிகையு …
கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
யாழ்ப்பாணத்து நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் அவர்களால் கதிர்காமக் கந்தன் மேல் கண்ணோய் தீர பாடி கண்ணோய் தீர்ந்ததே இந்த கதிரைச் சிலேடை வெண்பாவாகும். இந்நூல் சிலேடை வெண்பாக்களினால் ஆன நூறு பாடல்களால் ஆனது. பொருளணியாகிய சிலேடையணியும் சொல்லணியாகிய மடக்கணியும் இந்த பாடல்கள் தோறும் நின்று சிறப்புச்செய்கின்றன. இப்பாடல்களில் சிலேடையணிகள் எல்லாம் கதிர்காமப்பதியினையும் மடக்கணிகள் எல்லாம் முருகப்பெருமானையும் போற்றி துதிக்கின்றன.
இனி நூலுக்கு வருவோம்.
காப்பு
விநாயகர்
கானுயிர்பூஞ் சோலைக் கதிரைச்சி லேடைவெண்பாநானுரைக்கச் செஞ்சோ னயந்தருமே – வானவர்க்குமுன்னுனை மாமுகவன் முன்னருளு மைந்துகரத்தன்னானை மாமுகவன் …

பின்னூட்டங்கள்