Posts Tagged "புரவிகள் திரும்புகின்றன"

உமா ஜிப்ரான்

தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத பெயரென்றாலும் அழகான ஆக்ரோசமான பல கவிதைவரிகளுக்கு சொந்தக்காரர். ஈழத்திலிருப்பதை பெருமையாய் சொல்லும் வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது கவிதை ஒன்றை பாருங்கள். இது இம்சை எனும் பெயரில் காலச்சுவடு 19 வது இதழில் வெளிவந்தது.

ஆண்மை தெறிக்கும் தேகம்
விழுங்கும் முனைப்பில்
அலைந்து மேயும் விழிகளில்
இரைதேடும்
பசித்த புலியின் குரூர வசீகரம்

உரையாடலின் நடுவே
அடிக்கடி
நெருப்பை உமிழும் நெடுமூச்சு
அலையென எழுந்து தாழும் மார்பை
விழிகள் தெறிக்க
………………………… தொடந்து செல்கிறது கவிதை.

நீண்ட நாட்களாகவே இவரை எனக்கு பழக்கமாக இருந்தாலும் ஒரு இலக்கியவாதியாக அறிமுகமாகி சில நாட்களே ஆகின்றன.

அமைதியான பேச்சு, அழகான உருவத்திற்கு சொந்தக்காரர் உமாஜிப்ரான். பாலஸ்தீனத்து இலக்கியவாதி கலீல் ஜிப்ரான் இன் பாதிப்பு இந்த புனை பெயரென்றாலும் மீதி உமா யாரென்று தெரியவில்லை. காலச்சுவடு இதழ்கள் உட்பட சிறிய புத்தகச்சேகரிப்பு இவரிடம் உண்டு அவற்றிலிருந்து எனக்கு இப்போது புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்துவதில் பின்னடிக்கும் அவ்வாறான ஆசைகள் தனக்கும் இருந்ததை நினைவு கூருகினறார்.

எப்படியென்றாலும் இவரிடமிருந்து ஒரு கவிதை வாங்கி பதிவில சேக்கிறது எண்டு முடிவெடுத்திருக்கிறன் பாப்பம்.

3 கார்த்திகை, 2006