கதிரைச் சிலேடை வெண்பா 11-15

மிக்க குறத்தியரு மென்புனப்புள் ளோப்புநருங்
கைக்குறி பார்க்குங் கதிரையே – கைக்குங்
கடமலையு மையற் கடமு மழித்துப்
படமலையு மையன் பதி. (11)

அஞ்சநடை யார்கதுப்ப மம்மவிணை யுஞ்செயிரில்
கஞ்சனை கடுக்குங் கதிரையே – விஞ்சுபல
மாயத்தா னாடல் வரைபகவை வேல்விடுமு
பாயத்தா னாடற் பதி. (12)

வெண்ணகையார் கூந்தலிலும் வேடுவர்கள் காட்டி
கண்ணி வளைக்குங் கதிரையே – நண்ணுங் (னிலுங்)
கருமாயச் சூரறுத்துக் காப்பான்கூர் வேலாற்
கருமாயச் சூரறுத்தான் காப்பு. (13)

இந்துவத னத்த ரிளமுலையும் வீரர்களும்
கந்துகத்தே ரோட்டுங் கதிரையே – முந்தும்
பாவமா வினையடித்தான் பாதனலை மேலுற்
பாவமா வினையடித்தான் பற்று. (14)

மன்னுகா ரிற்கடம்பு மாமணத்தி லாடவருங்
கன்னிகையை யேற்குங் கதிரையே – முன்னமலை
மாவர சத்தியத்த மால்கொளசுர் மைந்தடக்கு
மாவர சத்தியத்தன் வாழ்வு. (15)

குறிச்சொற்கள்: