பதிவுகள்

iOS 4 - with all the new features, render Tamil beautifully. (2 months ago)

வரதர் ஐயாவின் புதிய முயற்சி

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.

அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.

20 பின்னூட்டங்கள்


  1. கானா பிரபா
    Nov 29, 2006

    வரதர் ஐயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், ஏதாவது செய்யவேண்டும் என்றால் எனது மெயிலுக்கு தனிமடல் போடுகிறீர்களா?

    கடந்த முறை யாழ் சென்றபோது வரதர் ஐயாவைப் படம் எடுத்து, வானொலிக்காகப் போட்டி எடுப்பதாகவும் சொல்லியிருந்தேன், ஆனால் இன்னும் சந்தர்ப்பம் கைகூட முடியாமல் நாட்டு நிலமை மாறிவிட்டது.


  2. கானா பிரபா
    Nov 30, 2006

    வரதர் ஐயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், ஏதாவது செய்யவேண்டும் என்றால் எனது மெயிலுக்கு தனிமடல் போடுகிறீர்களா?

    கடந்த முறை யாழ் சென்றபோது வரதர் ஐயாவைப் படம் எடுத்து, வானொலிக்காகப் போட்டி எடுப்பதாகவும் சொல்லியிருந்தேன், ஆனால் இன்னும் சந்தர்ப்பம் கைகூட முடியாமல் நாட்டு நிலமை மாறிவிட்டது.


  3. பகீ
    Nov 30, 2006

    நன்றி கானா பிரபா. உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் ஊக்கப்படுத்த. வருகைக்கு நன்றி


  4. பகீ
    Nov 30, 2006

    நன்றி கானா பிரபா. உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் ஊக்கப்படுத்த. வருகைக்கு நன்றி


  5. Kanags
    Nov 30, 2006

    வரதர் ஐயாவின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரபா, வரதர் ஐயா அவர்களை விரைவில் பேட்டி கண்டு எமக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.


  6. Kanags
    Nov 30, 2006

    வரதர் ஐயாவின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரபா, வரதர் ஐயா அவர்களை விரைவில் பேட்டி கண்டு எமக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.


  7. பகீ
    Nov 30, 2006

    kanags வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. கானா பிரபா நீங்கள் கேள்விகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை பேட்டியாக எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.


  8. பகீ
    Nov 30, 2006

    kanags வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. கானா பிரபா நீங்கள் கேள்விகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை பேட்டியாக எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.


  9. கானா பிரபா
    Nov 30, 2006

    வணக்கம் பகீ

    இதை வானொலிக்காக ஒலிவடிவில் தான் செய்ய இருக்கிறேன், வரதர் ஐயா தன் ஆனந்தா அச்சகத் தொலைபேசி எண் தந்தவர், ஆனால் எமது நேர வித்தியாசத்தில் அவரைத் தொலைபேசியில் பிடிப்பது கடினம் என்றி நினைக்கிறேன்.


  10. கானா பிரபா
    Nov 30, 2006

    வணக்கம் பகீ

    இதை வானொலிக்காக ஒலிவடிவில் தான் செய்ய இருக்கிறேன், வரதர் ஐயா தன் ஆனந்தா அச்சகத் தொலைபேசி எண் தந்தவர், ஆனால் எமது நேர வித்தியாசத்தில் அவரைத் தொலைபேசியில் பிடிப்பது கடினம் என்றி நினைக்கிறேன்.


  11. பகீ
    Nov 30, 2006

    ம்……….. அதுவும் இப்போது. கடினம்தான்.


  12. பகீ
    Nov 30, 2006

    ம்……….. அதுவும் இப்போது. கடினம்தான்.


  13. johan-paris
    Nov 30, 2006

    பகீ!
    அவர் முயற்சி வெற்றியடையட்டும். 2 புத்தகங்கள் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.
    யோகன் பாரிஸ்


  14. டிசே தமிழன்
    Nov 30, 2006

    வரதர் என்றவுடன் எனக்கு அவரது அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகள் தான் நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆவலாக எப்போது வரும் என்று எதிர்பார்த்து வாசிக்கும் சஞ்சிகை அது. போர்க்காலச் சூழ்நிலையில் என்னைப்போன்றவர்களை வாசிப்பை நெசிக்கச் செய்ததற்கு அறிவுக்களஞ்சியத்துக்கும் நங்கூரத்திற்கும் பெரும்பங்கு உண்டு. வரதரின் விருப்புக்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.


  15. johan-paris
    Dec 01, 2006

    பகீ!
    அவர் முயற்சி வெற்றியடையட்டும். 2 புத்தகங்கள் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.
    யோகன் பாரிஸ்


  16. டிசே தமிழன்
    Dec 01, 2006

    வரதர் என்றவுடன் எனக்கு அவரது அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகள் தான் நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆவலாக எப்போது வரும் என்று எதிர்பார்த்து வாசிக்கும் சஞ்சிகை அது. போர்க்காலச் சூழ்நிலையில் என்னைப்போன்றவர்களை வாசிப்பை நெசிக்கச் செய்ததற்கு அறிவுக்களஞ்சியத்துக்கும் நங்கூரத்திற்கும் பெரும்பங்கு உண்டு. வரதரின் விருப்புக்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.


  17. பகீ
    Dec 01, 2006

    யோகன் டி.சே தமிழன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  18. பகீ
    Dec 01, 2006

    யோகன் டி.சே தமிழன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  19. வெற்றி
    Dec 01, 2006

    பகீ,
    பெரியவர் வரதர் ஐயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பகீ, யார் இந்த வரதர் ஐயா? முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவேன், அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு[என்னையும் சேர்த்து] பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி.


  20. வெற்றி
    Dec 01, 2006

    பகீ,
    பெரியவர் வரதர் ஐயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பகீ, யார் இந்த வரதர் ஐயா? முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவேன், அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு[என்னையும் சேர்த்து] பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி.

உங்கள் கருத்தினை சொல்லுங்கள்

முன்னம் அலட்டியது