அடொப் அக்னி

இதனை சிலர் முன்னமே அறிந்திருக்க கூடும். அறியாதவர்களுக்காகவே இந்த பதிவு. ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன்னர் Macromedia Fireworks என்று அறியப்பட்ட மென்பொருளின் புதிய வெளியீட்டின் பேற்றா பதிப்பு சோதனைக்காக கிடைத்திருந்தது. அப்பொழுதே இதனை எழுதவேண்டும் என்று யோசித்தாலும் இப்பொழுதே பதிகின்றேன். மக்ரோமீடியா நிறுவனம் அடொப் நிறுவனத்துள் உள்வாங்கப்பட்ட பின் வெளிவரும் பதிப்பு இது ஆனால் பெயர் அடொப் அக்னி என்ற பெயருடன். இதன் நுளைவுப்படத்தினை கீழே பாருங்கள்.
இந்தியர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

4 மார்கழி, 2006

நற்சிந்தனை பற்றி…..

சிவயோக சுவாமிகள்(யோகர் சுவாமிகள் பற்றி அறிய http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm இங்கு செல்லுங்கள்) அருளிய திருப்பாடல்களே நற்சிந்தனை எனப்படுவன. இவை திங்கள்தோறும் சிவதொண்டன் இதழில் வெளிவந்தவை (சிவதொண்டன் இதழ் இன்றளவும் சிவதொண்டன் சபையினரால் வெளியிடப்படுகின்றது). பின்னர் இவை 1959 இல் தொகுக்கப்பெற்று புத்தகமாக வெளிவந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எளிய இனிய தமிழ் நடையில் அமைந்தன. நற்சிந்தனைச் செய்யுள்கள் ஞானப்பொக்கிசமாயும், வேதோபநிடத ஆகம சாரமாயும் விளங்குவன.

தன்னை அறிந்தால் தவம் வேறில்லை.

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றிப் பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லைத்
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நன்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லைச்
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

3 மார்கழி, 2006

நானும் ஒரு சர்வே..

கடந்த ஒரு கிழமையாக அனேகமாக எந்த பதிவிற்கு போனாலும் ஒரு சர்வே காணப்படுகிறது. இதைப்பார்த்தபின் எனக்கு ஒரு சர்வே நிரலை எழுதும் ஆசை வந்துவிட்டது. முழுவதும் நானே எழுதாமல்(அவ்வளவிற்கு திறமையிருந்தா பிறகென்ன?????) Flash relief இன் Poll component ஐ பலரும் பயன்படுத்தக் கூடியவாறு (Multi user system) உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் எவரும் இதனை தங்கள் சொந்த சர்வேக்கு பயன்படுத்த முடியும். சர்வேயின் பூரண கட்டுப்பாடும் உருவாக்குபவரிடமே இருக்கும் ஆனால் முடிவுகளை(வாக்குகளின் எண்ணிக்கையை) மாற்ற முடியாது. ஆனால் இது எந்தளவிற்கு சரியாக வேலை செய்கிறுது என்று சரிபார்க்க உங்கள் உதவியை நாடியுள்ளேன். வந்தது வந்ததாக ஒரு வாக்களியுங்கள். ஏனென்றால் அப்போதுதான் இதன் வினைத்திறனை சரிபார்க்க முடியும்.

3 மார்கழி, 2006