சூத்திரஞானம்
வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.
(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)
வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.
(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.
சரசோதி மாலை – சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை – சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி – சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி – சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.
இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.
ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் சிறிதளவு காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு தீவிரமான ஓட்டம் ஆத்மாநாமின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.
சில ஆத்மாநாமின் வரிகளை பாருங்கள்.
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
பாட்டாளி மக்களுக்கான இந்தவரிகளும் யோசிக்க வைக்கிறது
இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்கு
மற்றவர்களுக்காய் பாடுபடும் ஒருவனாக அனேக கவிதைகளில் ஆத்மாநாம் காணப்படுகிறார்.
பழக்கம் எனும் இந்தக் கவிதையில் வரும் வரிகள் ஆத்மாநாமை நன்கு வெளிப்படுத்துகின்றன.
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
ஆத்மாநாம் தன்னைப்பற்றிய சிறு கட்டுரையும் இத்தொகுப்பில் காணப்படுகின்றது.