ஊரோடி சொந்த வீட்டில்

இவ்வளவு காலமும் வாடகை வீட்டில இருந்த ஊரோடி இப்ப சொந்த வீட்டுக்கு வந்திருக்கு. இணையத்தளங்களோட நீண்ட கால பரிட்சயம் இருந்து வந்தாலும், ஏனோ ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.

திடீரெண்டு ரவிசங்கரோட பதிவொன்ற பாத்த பிறகு (எந்த பதிவெண்டு மறந்துபோனன். எப்பிடி என்ர ஞாபக சக்தி??) சொந்த வீட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வந்து மூண்டு நாளையில http://oorodi.blogspot.com, http://www.oorodi.com ஆக வந்திருக்கு. அத்தோட ரவிசங்கரோட பதிவில இருந்த மயூரன்ரை (அவற்றதானே??) ஐடியாவை பாவிச்சு புளொக்கரை இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸில இம்போட் பண்ணி பிறகு அதை எக்ஸ்போட் பண்ணி இந்த வேர்ட் பிரஸில எல்லா பதிவுகளையும் கொண்டுவந்திருக்கிறன். (இரண்டு பேருக்கும் நன்றி).

இப்பிடி இருந்த நான்

இப்பிடி ஆகிட்டேன்.

பிறகென்ன எப்பிடி இருக்கெண்டு ஒரு பின்னூட்டத்தை போட்டுவிடுங்கோ.

குறிச்சொற்கள்: , ,

பின்னூட்டங்களில்லை