வேர்ட்பிரஸ் பதிப்பு 3.1 வெளிவந்ததில் இருந்து ஊரோடியின் வடிவமைப்பை புதிய வசதிகளை உள்ளடக்கி மாற்றுவதற்கு எண்ணயிருந்தேன். நீண்ட காலங்களின் பின்னர் இப்போதுதான் முடிந்திருக்கின்றது.
வேர்ட்பிரஸில் இருக்கும் "இடுகை வகைகள்" என்கின்ற வசதி இவ்வார்ப்புருவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் tumblr போன்ற பதிவு வகைகளை உருவாக்க முடிவதுடன் அவற்றை சிறிது வித்தியாசமாக வடிவமைப்பும் செய்ய முடிந்துள்ளது.
இதன் மூலம் எனக்கு பிடித்த புகைப்படங்கள் தொடுப்புக்கள் என்பவற்றையும் இலகுவாக இனவருங்காலங்களில் பதிய முடியும் என ...
மேலும் வாசிக்க →
நீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.
வேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் ...
மேலும் வாசிக்க →
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.
ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் ...
மேலும் வாசிக்க →
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.
எதனையும் ஒரு ...
மேலும் வாசிக்க →
புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி - குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) ...
மேலும் வாசிக்க →