Archives
All Posts Tagged
Tag: ‘யாழ்ப்பாணம்’

யாழ்ப்பாண சாதி அமைப்பு.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.
1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.
வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.
ஆனால் இதிலே
மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை
ஆகியன …

Read More

இந்துக்களின் யுத்தம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும்
விபரங்களுக்கு

Score card க்கு

Read More

யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி…
புதியதோர் உலகம் செய்வோம்

என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு முடிவாகீற்றுது. சந்தா கட்டுறதிலதான் பிரச்சனை. தொடர்ந்து …

Read More

Jaffna: Tears, blood and terror

போன மாச கடைசியல எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவர் இலங்கையில இருக்கிற குறிப்பிடத்தக்க மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர். அவர் இப்ப இந்த மாச தொடக்கத்தில ஒரு கட்டுரை ஒன்றை அது சம்பந்தமாக எழுதியிருந்தார். இதை மொழிமாற்றம் செய்து போடுவம் எண்டுதான் பாத்தனான் இருந்தாலும் ஆங்கிலத்திலேயே இருந்தாத்தான் அவரது உணர்ச்சிகளை எல்லாராலயும் விளங்கிக்கொள்ளேலும் எண்டு அப்பிடியே கீழ ஆங்கிலத்தில.

Jaffna: Tears, blood and terror
by Ruki
Few weeks before I went to Jaffna, …

Read More

ஆறுமுக நாவலர் குருபூசை.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.என்று நல்லை கந்தன் கொடியேற்றத்தை பாடித்துதித்த …

Read More
Page 2 of 7«12345»...Last »

முன்னம் அலட்டியது