சுற்றுலாப் போனோம்
இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்



இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்



நான் பலருடைய பதிவுகளுக்கு செல்லும்போது கரையிலிருக்கின்ற தொடுப்புகளை அவதானிப்பது வழக்கம். இப்படிப் பார்க்கின்ற போது பலருடைய பதிவுகளில் அடொப் பிளாஸ்(Adobe Flash) மென்பொருளால் செய்யப்பட்ட ஒரு மணிக்கூட்டினை அவதானித்திருக்கிறேன். ஆனால் அதன்மேல் சுட்டியை கொண்டு செல்லும்போத அது ஒரு விளம்பரமாக தொழிற்படுவதை அவதானித்திருக்கின்றேன்.
இதன் விளைவுதான் இந்த கம்பி மணிக்கூடு. கீழ்வரும் நிரலை உங்கள் குடிலின் தேவையான இடத்தி்ல் ஒட்டுவதன் மூலம் ஒரு அழகிய மணிக்கூடினை பெற முடியும். உங்கள் பின்புல நிறம் என்னவாக இருப்பினும் அதனையே இம்மணிக்கூடும் பயன்படுத்தும். (I set a transparent parameter below the quality parameter). உங்களுக்கு தேவையான உயர அகலத்தை வேண்டியளவு செப்பம் செய்து கொள்ளுங்கள். (Change the width and height in both places)
<object classid=”clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000″ codebase=”http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,0,0 ” width=”200″ height=”200″ id=”a_clock” align=”middle”><param name=”movie” value=”http://www.aslibrary.org/images/a_clock.swf” /><param name=”quality” value=”high” /><param name=”wmode” value=”transparent”/><param name=”bgcolor” value=”#ffffff” /><embed src=”http://www.aslibrary.org/images/a_clock.swf” quality=”high” bgcolor=”#ffffff” width=”200″ height=”200″ name=”a_clock” align=”middle” type=”application/x-shockwave-flash” pluginspage=”http://www.macromedia.com/go/getflashplayer” /> </object>
இதனை பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ஒரு பின்னூட்டம் போடுங்கள். பயன்படுத்தாவிட்டாலும் கூட ஒரு பின்னூட்டம் போடுங்கள். மாற்றங்கள் தேவையென்று நினைப்பவர்கள் அதைக்குறித்தும் பின்னூட்டம் போடுங்கள். வேறு புதிய கருவிகள் தேவையென்று நினைப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் உருவாக்க முயற்சிக்கிறேன்.
வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.
(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)
அம்மா
நண்பர்கள் என்னைத் தேடி வந்து
கதவில் தட்டும்போதெல்லாம்
நீ வெம்பிக் கண்ணீர் மல்குதை
எண்ணி நான் வேதனைப்படுகிறேன்
ஆனால்
வாழ்க்கையின் சிறப்பு
என் சிறையில் பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்.
(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.
சரசோதி மாலை - சோதிட நூல்
செகராசசேகரமாலை – சோதிட நூல்
செகராசசேகரம் – வைத்திய நூல்
பரராசசேகரம் – வைத்திய நூல்
தஷிண கைலாச புராணம் – கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்
கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் – சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியது
இரகுவம்மிசம் – காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்
வையாபாடல் – இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையையும் கூறும் நூல்.
கோணேசர் கல்வெட்டு – கோணேசர் கோயில் வரலாறு கூறும் நூல்
கைலாயமாலை – கைலாயநாயர் கோயில் வரலாற்றையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் கூறும் நூல்
வியாக்கிரபாத புராணம் – வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியத்தின் தமிழ் வடிவம்
திருக்கரைசைப் புராணம் – தரைசைப்பதியின் நாதனான சிவனைப்பாடும் நூல்
கதிரைமலைப்பள்ளு – ஈழத்தெழுந்த முதல் பள்ளுப் பிரபந்தம்
ஞானப்பள்ளு – கத்தோலிக்க சமயத்தை புகழ்ந்து இயேசு நாதரை பாட்டுடைத்தலைவராய் கொண்ட நூல்.
அர்ச். யாகப்பர் அம்மானை – கிழாலி யாக்கோபு ஆலயத்தின் மீதெழுந்த நூல்.
ஞானானந்த புராணம் – கிறீத்தவ மத விளக்க புராணம்.
சிவாராத்திரி புராணம் – சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூல்.
ஏகாதசி புராணம் – ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அனுட்டித்தோர் சரிதங்களையும் கூறும் நூல்
கிள்ளை விடுதூது – காங்கேசன்துறை கண்ணியவளை குருநாத சுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட நூல்.
பிள்ளையார் கதை – பிள்ளையாரிற்கான விரதங்களை கூறும் நூல்.
அமுதாகரம் – விட வைத்திய நூல்.
திருச்செல்வர் காவியம் – கிறீத்தவ மத உயர்வை கூற எழுந்த நூல்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் – வெருகற் பதியில் எழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்டது.
சந்தான தீபிகை - சந்தான பலனை இனிது விளக்கும் நூல்.
கல்வளையந்தாதி - சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூல்.
மறைமசையந்தாதி – வேதாரிணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது பாடப்பட்ட நூல்.
கரவை வேலன் கோவை – கரவெட்டி வேலாயுதபிள்ளையை பாடும் நூல்.
பறாளை விநாயகர் பள்ளு – பாறாளாயில் எழுந்தருளியுள்ள விநாயப்பெருமானை பாடும் நூல்.
பஞ்சவன்னத் தூது
சிவகாமியம்மை துதி – இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்ட நூல்.
தண்டிகைக்கனகராயன் பள்ளு – கனகராயன் என்பவரை பாட்டுடைத்தலைவராய் கொண்டு பாடப்பட்ட நூல்.
புலியூரந்தாதி - சிதம்பரத்தீசனை போற்றிப்பாடிய நூல்.
காசியாத்திரை விளக்கம்.
இது ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சி எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது (கலாநிதி. க. செ. நடராசா -1982)