நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் ...
மேலும் வாசிக்க →
கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு ...
மேலும் வாசிக்க →
யாழ்ப்பாணத்தாக்கள் ஒருத்தரையும் விடுறேல்லை பார் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கு இந்த சிக்கிண்குணியா. மூண்டு நாளைக்கு முதல் மெதுவா குணங்குறிகள் தெரிஞ்சதுதான் எண்டாலும் பேசாம விட்டுட்டன். முந்தநாள் தொடங்கினது இப்பத்தான் விரலெண்டான்ன கொஞ்சம் வேலைசெய்யுது. எந்த வேலையெண்டாலும் கொஞ்சம் சிலோ மோசனிலதான் செய்யேலும். முதல் இரண்டு நாளும் சரியான தலையிடியும் காய்ச்சலும். அதுகள் குறைஞ்சவுடன இந்த நோவுகள் தொடங்கிச்சு பாருங்கோ பேசாம காய்ச்சலாவே கிடந்திருக்கலாம் போல இருக்கு. யாழ்ப்பாணத்து சனத்தொகையில ...
மேலும் வாசிக்க →
ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது. அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு ...
மேலும் வாசிக்க →
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத பெயரென்றாலும் அழகான ஆக்ரோசமான பல கவிதைவரிகளுக்கு சொந்தக்காரர். ஈழத்திலிருப்பதை பெருமையாய் சொல்லும் வர்க்கத்தை சேர்ந்தவர். இவரது கவிதை ஒன்றை பாருங்கள். இது இம்சை எனும் பெயரில் காலச்சுவடு 19 வது இதழில் வெளிவந்தது.ஆண்மை தெறிக்கும் தேகம்விழுங்கும் முனைப்பில்அலைந்து மேயும் விழிகளில்இரைதேடும்பசித்த புலியின் குரூர வசீகரம்உரையாடலின் நடுவேஅடிக்கடி நெருப்பை உமிழும் நெடுமூச்சுஅலையென எழுந்து தாழும் மார்பைவிழிகள் தெறிக்க.............................. தொடந்து செல்கிறது கவிதை.நீண்ட நாட்களாகவே இவரை ...
மேலும் வாசிக்க →