அனுபவம்

எனது அனுபவங்களின் தொகுப்பு

வரதர்

ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே. வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. ...

மேலும் வாசிக்க →

புத்தகக் கடைகள்

யாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. ...

மேலும் வாசிக்க →

யாழ் மண்

யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.தேங்காய் எண்ணெய் - 480.00 (240.00)அரிசி - 110.00 (38.00)சீனி - இல்லை ...

மேலும் வாசிக்க →

துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்.

ஒக்டோபர் 2006 தீராநதியில் வாஸந்தியின் துரத்தும் இறந்தகாலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் கட்டுரை வாசித்தேன் . வாஸந்தியிடம் நான் ஒன்று கேட்க விரும்புகின்றேன் கேத்தீஸ் இலங்கைத்தமிழர்களுக்காக செய்த நன்மை ஒன்றையாவது உங்களால் சொல்ல முடியுமா?இடதுசாரிக்கொள்கை கொண்ட கேத்தீசுக்கு ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றீர்களே. கட்டுரைக்கு உண்மைகள் தேவை வாஸந்தி ஆலாபனைகள் அல்ல.கேத்தீசின் கொலைக்கு உங்களைப்போல் யாராவது இங்குள்ள இலங்கைத்தமிழர்கள் கவலைப்பட்டதாய் நீங்கள் காற்றுவாக்கிலேனும் கேள்விப்பட்டதுண்டா? சிங்களத் தலைவர்களுக்குத்தான் தாங்கொணாக் கவலை ...

மேலும் வாசிக்க →

புத்தகச்சந்தை

கொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன ...

மேலும் வாசிக்க →